Wednesday, March 21, 2012

அசிங்கமாக மாட்டிக் கொள்ள பா.ஜ.க வுக்கு போட்டி யாரேனும் உண்டா?




கலாச்சாரக் காவலர்கள், இந்தியப் பண்பாட்டைப் 
போற்றுபவர்கள்,  பிறன் மனை நோக்காமை  
பேராண்மை  என்று வாழ்ந்த ராம பிரானுக்கு
கோயில் கட்டுவதையே கொள்கையாகக் 
கொண்டவர்கள், மாறுபட்ட  அரசியல் கட்சி,
 உயரிய, உன்னதக் கட்சி  என்றெல்லாம் 
பாரதீய ஜனதா  கட்சி, தன்னைப் பற்றி ரீல் ரீலாக   
கதை விட்டுக் கொள்ளும்.

ஆனால் பாவம், அந்தக் கட்சிக் காரர்கள்தான் 
அடிக்கடி அசிங்கமாக மாட்டிக் கொள்கின்றனர்.

கர்னாடக சட்டசபையில் மூன்று அமைச்சர்கள்
ஆபாசப்படம்  பார்த்து மாட்டிக் கொண்டனர்.
அந்தக் களங்கம் மறையும் முன்னர் இப்போது
குஜராத் மாநிலத்தில்  இரண்டு சட்டப்பேரவை
உறுப்பினர்கள், ஆபாசப் படம் பார்த்துள்ளனர்.
வழக்கம் போல  பத்திரிக்கையாளர்கள் 
கையும் களவுமாக பிடித்து விட்டனர்.

பாஜக உறுப்பினர்கள்  சட்டசபைக்கு  எதற்குப்
போகின்றனர் ? மக்கள் பிரச்சினைகளை 
விவாதிக்கவா? இல்லை ஆபாசப் படம்
பார்க்கவா? 

இந்த எழவையெல்லாம் வீட்டிலே பார்த்துத்
தொலைக்கக் கூடாதா? சட்டசபையில்தான்
பார்க்கனுமா என்று நிதின் கட்காரி தனது
கட்சிக்காரர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்
போவதாக தகவல்,

எனக்கு இன்னொரு யோசனை.

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட சபை
நடக்கும் போது, கேள்வி நேரம், பூஜ்ஜிய 
நேரம் என்பது போல ஆபாசப் பட நேரம்
என்று வைத்து தினமும் ஒரு மணி நேரம்
பிரம்மாண்டத் திரையில் பிட் படம் போட்டுக்
காட்டி விட்டால் அது சட்டபூர்வமாகி விடும்.
பத்திரிக்கையாளர்களின் புலனாய்வுக்கு
எல்லாம் வேலையே இருக்காது.

கட்காரி ஜீ, யோசனை பகுத் அச்சாவா?
 
 
 

1 comment:

  1. இவுகள எல்லாம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி நாட்டையே தலைகுனிய செய்யனுமா? இந்த லச்சணத்துல குசராத்து ஒளிருதாம்ல. நல்ல ஒளிருது ஓய்.

    ReplyDelete