Sunday, July 24, 2011

திக்விஜய் சிங் வெடிகுண்டு வீசியது ஏன்?





 காங்கிரஸ் கட்சியின்  சுப்ரமணிய சாமியான திக்விஜய்சிங் 
ஒரு திடீர் வெடி குண்டு ஒன்றை போட்டுள்ளார்.  ஆர்.எஸ்.எஸ் 
அமைப்பு  வெடி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளதாகவும்
அதற்கான வீடியோ ஆவணங்கள்  தன்னிடம் உள்ளதாகவும் 
சி.என்.என் தொலைக்காட்சிப் பெட்டியில் கூறியுள்ளார். 

பத்து ஆண்டுகள் முன்பே  இக்குற்றச்சாட்டை சொன்னதாக 
கூறியதாகவும் மத்திய பிரதேச  மாநிலத்தில்  ஆட்சி மாற்றம்
நிகழ்ந்ததால்  காவல் துறை நடவடிக்கை  எடுக்கவில்லை என்றும்
அவர் கூறியுள்ளார்.

எனது கேள்விகள் இரண்டுதான்

அன்றாடம் தொலைக்காட்சிகளுக்கு  பேட்டி  கொடுத்து வரும் 
திக்விஜய் சிங் பத்தாண்டுகளாக மவுனமாக  இருந்தது  ஏன்?  

எந்த பிரச்சினையிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப
இப்போது  இந்த கலகத்தை  துவக்கியுள்ளார்?


 

No comments:

Post a Comment