Saturday, April 18, 2026

76 லட்ச ரூபாய் தாமோதர்தாஸ் சொத்தா மோடி?

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு 76 லட்ச ரூபாய் அளவில் விளம்பரங்கள் கொடுத்துள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


ஏன் மிஸ்டர் மோடி,

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு.

இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் குரு பீடமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?

தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக முதலாளிகளிடமிருந்து மிரட்டி கொள்ளையடித்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் மக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏமாற்றி சேர்த்து வைத்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

ஒரு வேளை நீங்கள் கொடுத்த அந்த 76 லட்ச ரூபாய், உங்கள் அப்பா தாமோதர் தாஸ் சம்பாதித்த சொத்துக்களிலிருந்து கொடுத்ததா?

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete