Wednesday, June 19, 2024

"கவச்” எங்கேய்யா மோடி?

 


ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.

 20 சதவிகித ரயில்களில் கூட “கவச்” பொருத்தப்படவில்லை என்ற மோசமான உண்மை, கடந்த வருடம் ஒடிஷாவில் 200 உயிர்களைக் குடித்த விபத்தின் போதுதான் தெரிய வந்தது.

 ஒரு கொடிய விபத்திற்குப் பிறகாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் எதுவும் நடக்கவில்லை என்பது இன்னொரு விபத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

 இந்த ஒரு வருடத்தில் என்னதான் நடந்துள்ளது?

 வந்தே பாரத் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடத்தும் ரயில்களை அதிகரித்துள்ளார்கள், அதற்கு கொடியசைக்க தெய்வக் குழந்தை ஊர் ஊராகப் போனது.

 ஆறே கால் லட்ச ரூபாய் செலவில் மோடியின் மூஞ்சியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அமைக்கப்பட்டது.

 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் வெட்டப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டது.

 சீனியர் சிட்டிசன்களுக்கான  சலுகை வெட்டப்பட்டது தொடர்கிறது.

 ரயில்வே நிலத்தை விற்கும் முயற்சி, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று ரயில்வேவிற்கு மூடு விழா காணத்தான் ஆசைப்படுகிறது மோடி அரசு.

 இதெல்லாம் செய்யத் தெரிந்த மத்திய அரசுக்கு விபத்தை தவிர்க்க மட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 காரணம்?

 திமிர், அலட்சியம், பொறுப்பின்மை, இத்யாதி, இத்யாதி . . .

 இந்த எழவெடுத்த ஆட்சியில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment