Wednesday, June 19, 2024

நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும்

 


தமிழ்நாடு மட்டும் எதிர்த்துக் கொண்டிருந்த நீட் தேர்வுக்கு எதிரான குரல் மற்ற மாநிலங்களிலும் இப்போது பரவத் தொடங்கி விட்டது.

உ.பி. மஹாராஷ்டிரா, குஜராத், பீகார் மாநிலங்களிலும் எதிர்ப்பு தொடங்கி விட்டது.

பயிற்சி மையங்கள் என்ற பெயரில் செயல்படும் தரகு மையங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வசதி கொண்ட பெரும் செல்வந்தர்கள் வீட்டு வாரிசுகள் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையை உருவாக்கியதுதான் நீட் தேர்வின் சாதனை.

பயிற்சி மைய தரகர்களும் நீட் தேர்வு ஆணையமும் இணைந்து செய்யும் முறைகேடுகள் இப்போதுதான் வெளி வரத் தொடங்கியுள்ளது. 1563 என்பதெல்லாம் சொற்ப எண்ணிக்கை. கடலின் அடியே மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிதான் குஜராத் முறைகேடு.

.001 தவறு கூட இருக்கக்கூடாது என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வே முறைகேடுகளின் மையமாகிப் போனதால் அதற்கு வாய்ப்பில்லை. 

எனவே ஒரே தீர்வு

நீட் தேர்வை அகற்றுவதுதான்.

அந்த கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் குரல் வலுக்கட்டும்.

எதிர்ப்புத் தீ பரவட்டும் . . .

No comments:

Post a Comment