Sunday, June 16, 2024

மணிப்பூர் நாட்டாமை மாற்று உன் தீர்ப்பை . . .

 


ஆலமரத்தடியோ, செம்போ இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஏழு வருடம் யாரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது என்ற தீர்ப்பு மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

எங்கே?

அதான் தலைப்பிலேயே இருக்கிறதே!



மோடி செல்ல அஞ்சுகிற மணிப்பூரில்தான் . . .

யாருக்கு?

ஆல்பிரட் கன்னாகம் ஆர்தர்..

யார் இவர்?

அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி அவர்.

என்ன தவறு செய்தார்?

ஐக்கிய நாகா மக்கள் கூட்டமைப்பு என்ற மணிப்பூரில் உள்ள 21 நாகா இனங்களின் பஞ்சாயத்து ஆல்பிரட் ஆர்த்தரை அனைத்து நாகா அமைப்புக்களும் நாகா குடும்பங்களும் ஏழாண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்வது என்று அறிவித்தது.

நாகா மக்கள் முன்னணி என்ற கட்சியின் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்றதுதான் அவர் செய்த தவறு.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முயற்சி தொடங்கி விட்டது.  


No comments:

Post a Comment