Thursday, June 27, 2024

நீட் – நடத்துவது ??????

 


பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் அழுதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் “நீட்” தேர்வு வேண்டாம் என்பதற்கான முக்கியக் காரணம்.

இப்போது என்ன நிலைமை?

 நீட் பயிற்சி மையங்கள் இப்போது தரகு மையங்களாக மாறி விட்டது. “நீட்” மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகி பணம் உள்ளவர்களுக்கு சீட் வாங்கித்தரும் தரகர்களாக பயிற்சி மையங்களும் நீட் தேர்வின் நிர்வாகிகளும் மாறியுள்ளனர்.

நீட் அமைப்பின் தலைமை நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

 பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் பல மாநிலங்களிலிருந்தும் குவியத் தொடங்குகிறது. கைதுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 “நீட்” தேர்வை  ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்பதற்கு இவற்றை விட இன்னும் ஒரு முக்கியமான காரணம் புதிதாக கிடைத்துள்ளது.

 ஆம்.

 நீட்டை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி என்ன மாதிரியான அமைப்பு?

 அரசின் துறையா?

அரசு நிறுவனமா?

 இல்லை, இல்லை, இல்லை.

 


மன மகிழ் மன்றம், குடியிருப்போர் அமைப்பு (பதிவு செய்யப்படாத டுபாக்கூர் சங்கங்களை குறிப்பிடவில்லை) போல சாதாரண “சொஸைட்டி”.

 ஆமாம்.

 சொஸைட்டி சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட சாதாரண சொஸைட்டி.

 எந்த சட்டத்தின் படியும் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அதனால் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய பொறுப்பும் இல்லாத அமைப்பு. இதனை நம்பி பல லட்சம் மாணவ/மாணவியரின் எதிர்காலத்தை ஒப்படைத்திருப்பது கொடுமையானது. பி.எம் கேர்ஸ் நிதிக்கு முன்பாகவே மோடி அரசு செய்த மோசடி நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியை சொஸைட்டி என்ற அளவிலேயே வைத்துக் கொண்டது. அதிலிருந்தே தெரிகிறது மோசடி செய்யும் நோக்கில்தான் மோடி அப்படி உருவாக்கினார் என்பது.

 அதனால் உரக்கச் சொல்வோம்.

 “நீட்” தேர்வை அகற்று . . .

”நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி”யை கலைத்திடு

No comments:

Post a Comment