என் அப்பாவின் பெயர் கருணாநிதி என்றிருந்தால் எனக்கு முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும், என் அப்பாவின் பெயர் குப்புசாமி என்பதால்தான் கிடைக்கவில்லை என்று புலம்பிய ஆட்டுக்காரனே!
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் அழுதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் “நீட்” தேர்வு வேண்டாம் என்பதற்கான முக்கியக் காரணம்.
இப்போது என்ன நிலைமை?
நீட் பயிற்சி மையங்கள் இப்போது தரகு மையங்களாக மாறி விட்டது. “நீட்” மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகி பணம் உள்ளவர்களுக்கு சீட் வாங்கித்தரும் தரகர்களாக பயிற்சி மையங்களும் நீட் தேர்வின் நிர்வாகிகளும் மாறியுள்ளனர்.
நீட் அமைப்பின் தலைமை நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.
அரசு
நிறுவனமா?
மன
மகிழ் மன்றம், குடியிருப்போர் அமைப்பு (பதிவு செய்யப்படாத டுபாக்கூர் சங்கங்களை குறிப்பிடவில்லை) போல சாதாரண “சொஸைட்டி”.
”நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி”யை கலைத்திடு
ஆட்டுக்காரன் உதிர்த்த ஒரு முத்து கீழே . . .
எந்த காலத்திலும் அப்படி அழகு பார்க்கும் வாய்ப்பை தமிழ்நாடு தராது என்பதால் திராட்சை கிட்டா நரியாக வஜனம் பேசுது தெய்வக்குழந்தையின் தெய்வ வாரிசு ...
உத்திர பிரதேச மாநிலத்தில் பருவ மழை தொடங்கி விட்டது.
நல்ல விஷயம்தானே என்றுதானே நினைக்கிறீர்கள்!
புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில் ராமர் விக்கிரகத்திற்குத்தான் நல்ல செய்தியில்லை.
ஆமாம்.
கோயில் கர்ப்பகிருகத்தின் மேல் கூறை மழையில் ஒழுகுகிறது. கோயிலெங்கும் சுவர்களில் தண்ணீர் கசிகிறது.
"எத்தனை பொறியாளர்கள் இருந்து என்ன பயன்?இப்படி கோயில் கட்டுமானம் மழைக்கு தாங்கவில்லையே!"
இப்படி புலம்பியிருப்பவர் அயோத்தி கோயிலின் தலைமைப் பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்.
பாவம்! அவருக்கு தெரியவில்லை.
மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமென்று . . .
அபூர்வப் பிறவி மீது வாரணாசியில் வீசப்பட்ட ஒத்த செருப்பு உருவாக்கிய கார்ட்டூன்கள் கீழே . . .
ஒத்த
செருப்பு என்ற பெயரில் தமிழ்நாடு திரைப்படமே
அளித்தது குறிப்பிடத்தக்கது.
பதிவின் தலைப்பிற்கும் படத்திற்கும் காரணம் ஆட்டுக்காரனின் நெருங்கிய சகா திருச்சி சூர்யாதான். வரும் பணத்தில் ஆட்டுக்காரனுக்கு எவ்வளவு செல்கிறது என்பது மட்டுமே என் கேள்வி.
இதை விட இன்னொரு ஸ்பெசல் ஐடம் வேறு கொடுத்துள்ளார். அது பிறகு . . .
நேற்று முன் தினம் எழுதிய "நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும் என்ற பதிவை முகநூல் நீக்கி விட்டது.
சங்கிகள் அனுதினமும் செய்யும் நச்சுப் பிரச்சாரத்தால் பாழாகாத சமூகத் தரத்திற்கு நீட் எதிர்ப்பு மட்டும் பிரச்சினையாகிறது.
சமூகத் தரம் என்பதை விட மிகவும் கடுப்பேற்றியது வேறு ஒன்று.
லைக்கிற்கும் ஷேருக்கும் தவறான பதிவு போடுகிறாய் என்று சொல்கிறது.
அடேய் மார்க், இந்த லைக்கையும் ஷேரையும் வச்சி என்னய்யா செய்யறது? ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்குக் கூட பிரயோசனம் கிடையாது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.
வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கள்ளச்சாராய விற்பனை ஒன்றும் திருட்டுத்தனமாக நடைபெறுவதில்லை. எங்கே யார் காய்ச்சி, யார் விற்கிறார்கள் என்பதெல்லாம் போலீஸ், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள், நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் என அதிகார வட்டத்தில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரியும்.
ஆனால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள், காரணம் எளிதானது. கள்ளச்சாராய வியாபாரிகள் மூலம் வரும் காசு வாயை மூட வைக்கும்.
இப்போது கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு காரணமான குற்றவாளிகள், அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய கூட்டுக்களவாணிகள் அத்தனை பேரையும் கைது செய்து கடுமையான தண்டனை தர வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் இனி இது போன்றதொரு துயரம் நடக்காது.
ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மட்டும் எதிர்த்துக் கொண்டிருந்த நீட் தேர்வுக்கு எதிரான குரல் மற்ற மாநிலங்களிலும் இப்போது பரவத் தொடங்கி விட்டது.
உ.பி. மஹாராஷ்டிரா, குஜராத், பீகார் மாநிலங்களிலும் எதிர்ப்பு தொடங்கி விட்டது.
பயிற்சி மையங்கள் என்ற பெயரில் செயல்படும் தரகு மையங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வசதி கொண்ட பெரும் செல்வந்தர்கள் வீட்டு வாரிசுகள் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையை உருவாக்கியதுதான் நீட் தேர்வின் சாதனை.
பயிற்சி மைய தரகர்களும் நீட் தேர்வு ஆணையமும் இணைந்து செய்யும் முறைகேடுகள் இப்போதுதான் வெளி வரத் தொடங்கியுள்ளது. 1563 என்பதெல்லாம் சொற்ப எண்ணிக்கை. கடலின் அடியே மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிதான் குஜராத் முறைகேடு.
.001 தவறு கூட இருக்கக்கூடாது என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வே முறைகேடுகளின் மையமாகிப் போனதால் அதற்கு வாய்ப்பில்லை.
எனவே ஒரே தீர்வு
நீட் தேர்வை அகற்றுவதுதான்.
அந்த கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் குரல் வலுக்கட்டும்.
எதிர்ப்புத் தீ பரவட்டும் . . .
பொதுத்தேர்தலில் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது. ஆனால் அது மற்ற சங்கிகளுக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான் பழைய ஞாபகத்தில் இன்னும் மிரட்டுகிறார்கள்.
பழைய
புளிச்சுப் போன உதாரணம்தான். வேறு வழியில்லை.
நாய் வால் நிமிராது.
அதனால் நறுக்கி விட்டால் ஆட்டாது.
ஆலமரத்தடியோ, செம்போ இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஏழு வருடம் யாரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது என்ற தீர்ப்பு மட்டும் சொல்லப்பட்டுள்ளது.
எங்கே?
அதான் தலைப்பிலேயே இருக்கிறதே!
மோடி செல்ல அஞ்சுகிற மணிப்பூரில்தான் . . .
யாருக்கு?
ஆல்பிரட் கன்னாகம் ஆர்தர்..
யார் இவர்?
அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி அவர்.
என்ன தவறு செய்தார்?
ஐக்கிய நாகா மக்கள் கூட்டமைப்பு என்ற மணிப்பூரில் உள்ள 21 நாகா இனங்களின் பஞ்சாயத்து ஆல்பிரட் ஆர்த்தரை அனைத்து நாகா அமைப்புக்களும் நாகா குடும்பங்களும் ஏழாண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்வது என்று அறிவித்தது.
நாகா மக்கள் முன்னணி என்ற கட்சியின் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்றதுதான் அவர் செய்த தவறு.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முயற்சி தொடங்கி விட்டது.
ஆட்டுக்காரனின் அல்லக்கையும் பாஜக ஐ.டி செல் என்றழைக்கப்படும் வார் ரூமின் பொறுப்பாளர், அமித்ஷா ,டமில் ம்யூசிக்கை மிரட்டியதும் போட்ட பதிவு கீழே உள்ளது.
கீழேயுள்ள பதிவை ஆட்டுக்காரனின் ஒரு அல்லக்கையின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன். அதை படித்து முடித்ததும் சிரிக்கக் கூடாது.
பில்ட் அப் கொடுத்து கொடுத்து அடி வாங்கிய பின்பும் திருந்த மாட்டாங்க போல!
என்ன செய்ய நாய்களின் வால் எப்போதுமே நிமிராதே!
கீழே உள்ள செய்தியை படியுங்கள்
பாஜகவை உள்ளூர் மக்கள் தேர்தலில் கைவிட்டால் வெளியூர் பக்தர்களும் கைவிடுகின்றனரே!
என்னை வைத்து அரசியல் செய்யாதே என்று ராம் லல்லா எச்சரிக்கிறாரோ?
ஆட்டுக்காரனுக்கு கோவை விமான நிலையத்தில் என்ன நடந்தது?
ஏன் என்று கேட்கிறீர்களா?
கீழேயுள்ள செய்தியை படியுங்கள் . . .
வாழ்க்கையில் எப்போதும் கோவை விமான நிலையத்தில் பேட்டி இல்லை என்று மனம் நொந்து சொல்லும் அளவிற்கு கோவை விமான நிலையத்தில் ஆட்டுக்காரனை என்னய்யா செஞ்சீங்க? சம்பவத்தின் வீடியோ. கீடியோ?
சரி, இந்த முடிவை ஆட்டுக்காரன் எங்கே சொன்னான் தெரியுமா?
கோவை விமான நிலையத்தில் 😁😁😁😁😁
கீழேயுள்ள காணொளியை பார்த்து விடுங்கள். ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை, இன்னும் ஒரு முறை பார்க்கலாம். தவறில்லை.
அமித்ஷா முகத்தின் கொடூரத்தை பார்த்தீர்கள் அல்லவா!
ஒரு பொது மேடையில் ஆளுனராக இருந்த ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாக மிரட்டுகிறாரே, அவர் மற்றவர் கண்ணில் படாமல் என்னென்ன கொடிய செயல்களை செய்வார்! செய்திருப்பார்! இந்த கிரிமினல் உள்துறை அமைச்சர்!
முந்தையதொரு பதிவில் சொல்லியிருந்தது போல நாற்பது எம்.பிக் களால் என்ன பயன் என்பது பற்றி கல்வியாளர் தோழர் இரா.எட்வின் எழுதியிருந்த பதிவை பகிர்ந்து கொள்கிறேன்
40/40 எடுத்து என்ன கிழித்துவிடப் போகிறீர்கள் என்ற கேள்வி பரவலாக வைக்கப்படுகிறது
இந்தக் கேள்வியைத்தான் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடத்திலே கொண்டுபோகப் போகிறார்கள்
இதன் மூலம் எங்களால் மந்திரியாக்கக்கூட முடியவில்லை. எங்களுக்கு வாய்ப்புத் தந்தால்தானே அமைச்சராக்கி உங்களுக்கு நல்லது செய்ய முடியும்
என்ற நேரேஷனைத்தான் அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்
வேறொன்றும் இல்லை
முதலில் நாங்கள் நாற்பதல்ல
இருநூற்றி முப்பத்தி சொச்சம் நாங்கள்
இந்த எண் என்ன செய்திருக்கிறது என்றால்
என்ன சொன்னீர்கள்?
நானூறு கொடுங்கள்
ஒரே நாடாக்குகிறோம் என்றீர்கள்
அதை எங்கள் எண் உடைத்திருக்கிறது
அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றத் துடித்தீர்கள்
இப்போது அதுகுறித்துப் பேசிப் பாருங்கள்
சந்திரபாபு நாயுடு சாரே பதில் சொல்வார்
நாட்டின் பெயரை மாற்றுவோம் என்றீர்கள்
எங்கே முயற்சி செய்யுங்கள்
இஸ்லாமியர்களை அடக்குவோம் என்றீர்கள்
பாங்குச் சத்தமே இல்லாமல் செய்வோம் என்றார் ஒரு முதல்வர்
தைரியம் இருந்தால் இப்போது அப்படிப் பேசிப் பாருங்கள்
மதத்தின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்றீர்கள்
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர் கருணை இருக்கும்வரைதான் நீங்கள் பதவியில்
பிரதமர், அது இது எல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை
எங்கள் எண்ணத்திற்கு மாறாக நீங்கள் ஆசைப் பட்டதை செய்ய முடியாமா உங்களால்