Wednesday, May 29, 2024

கிரிமினல்கள் பில்லா, ரங்கா வழியில் ஸ்மிர்தியும் . . .

 




தமிழ்நாட்டுக்கு எதிராக ஸ்மிர்தி இராணியும் …

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஒடிஷாவில் முதலில் விஷம் கக்கியது “தாய் மூலம் பிறக்காத” மோடி.

 தமிழ்நாட்டுக்காரன் ஒடிஷா முதல்வராகலாமா என்று அடுத்த விஷத்தை அளித்தது கிரிமினல் ஷா.

 இப்போது மூன்றாவது பாட்டில் விஷத்தை கையிலெடுத்திருப்பது முன்னாளில் தொலைக்காட்சியில் சீதையாக நடித்த ஸ்மிர்தி இராணி அம்மையார்.

 “ ஒடிஷா மாநிலத்தின் அரசுப்பணிகளை எல்லாம் தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள்தான் (இது தவறான தகவலாம்) செய்கிறார்கள். ஒடிஷாவின் ரிமோட் தமிழ்நாட்டின் கையில் இருக்கிறது. அதனால்தான் பேரிடர்/இயற்கைச் சீற்றம் வந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்க்கிறார்கள்”

 ஏம்மா! உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? இந்தியாவிலேயே பேரிடர்களை சிறப்பாக கையாளும் மாநிலம் என்ற பெருமை ஒடிஷா மாநிலத்திற்கு இருக்கிறது. அதற்கான கட்டமைப்பை உருவாக்கிய இருவரும் தமிழர்கள்தான். அம்மாநிலத்தின் தலைமைச்செயலாளராக இருந்து இப்போது முதல்வரின் ஆலோசகராக இருக்கிற திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களும் இப்போது சங்கிகள் வெறுப்பை உமிழும் வி.கே.பாண்டியன், ஐ.ஏ.எஸ் அவர்களும்தான்.

 உண்மைகளுக்கு புறம்பாக ஒடிஷா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக திருப்பும் வேலையை  கிரிமினல் கூட்டாளிகளுக்குப் பிறகு ஸ்,இர்தி அம்மையார் துவக்கியுள்ளார். இப்படிப்பட்ட பிரிவினைவாதிகளை சும்மா விடலமா? தமிழ் நாட்டு மக்களுக்கு எதிரானவர்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கலாமா?

 மனசாட்சியுள்ளவர்கள் என் கருத்தை ஒப்புக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment