Saturday, May 25, 2024

ஜட்ஜய்யா சொன்னது நிசமா?

 


நேற்று எந்த ஜட்ஜய்யா பற்றி எழுதினேனோ, அதே ஜட்ஜய்யா பற்றியே இன்றும் எழுத வேண்டியுள்ளது.

அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்த  ஜட்ஜய்யா அதற்கு சொன்ன காரணம்தான் ரொம்பவும் இடிக்குது.

அவரின் அறையில் இரண்டு அரசியல் முக்கியஸ்தர்கள் சந்தித்து சவுக்கு சங்கர் வழக்கை இன்று எடுத்துக் கொள்ளாமல் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாலேயே அவர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு குண்டாஸை ரத்து செய்துள்ளதாக சொல்லியுள்ளார்.

சட்டப்படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

என்னுடைய பணியில் இடையூறு செய்கிறார்கள், எனக்கு அழுத்தம் அளிக்கிறார்கள் என்று காவல்துறையில் புகார் அளித்து கைது செய்ய வைத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் இவரே சுமோட்டாவாக வழக்கை பதிவு செய்து கைதுக்கான ஆணையை போட்டிருக்க வேண்டும்.

அதை விடுத்து சீமான் போல கதையளப்பது ஒரு நீதிபதிக்கு அழகல்ல.

இவருடைய ஆர்.எஸ்.எஸ் பூர்வாசிரமம் அறிந்தும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் இவரை அணுகினார்கள் என்று சொல்வதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. நீங்கள் சொன்னது நிஜமில்லை யுவர் ஆனர். 

No comments:

Post a Comment