Tuesday, May 21, 2024

நாக்கு அழுகிடும் மோடி

 


மோடி இப்போது உதிர்த்த முத்து கீழே உள்ளது.



மோடி சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதே கிடையாதா?

குஜராத் முதல்வராக இருந்த போது

கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை “காரின் சக்கரத்தில் அடிபட்ட நாயின் மகன்கள்”  என்றார்

அகதிகள் முகாம்களை “குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை” என்றார்.

பிரதமரான பின்பு

உத்தரப்பிரதேசத் தேர்தலின் போது . . .

“கபர்ஸ்தான்கள் (இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடம்) மின் வசதியோடு ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது, ஆனால் நம் கோயில்களில் இருள்தான் இருக்கிறது” என்றும்

“இந்த ரயில் விபத்தை எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் திட்டமிட்டு இங்கே உள்ளவர்கள் செய்தார்கள்” என்றும் பேசினார்.

இதோ இந்த தேர்தலில்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

 காங்கிரஸ் கட்சி உங்களின் தாலி உட்பட அனைத்து சொத்துக்களையும் பறித்து முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குழந்தை ராமர் கோயிலுக்கு பாப்ரி மசூதி பூட்டு போட்டு பூட்டி விடுவார்கள். 

 காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள். குழந்தை ராமர் மீண்டும் கூடாரத்துக்கு போய் விடுவார்.

 முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வர எஸ்.சி/எஸ்.டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை ரத்து செய்ய காங்கிரஸ் திட்டமிடுகிறது.

 காங்கிரஸை முன் வைத்து மோடி விஷம் கக்கியதெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான்.

 மோடி கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டமே இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான்.

 இந்த லட்சணத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தான் பேசியதில்லை என்று மோடி சொல்வது பொய், பொய்யைத்தவிர வேறில்லை.

 “பொய் சொன்னால் நாக்கு அழுகித்தான் போகும்” என்று அக்காலத்தில் சொல்வார்கள்.

 மோடியின் நாக்கு அழுகும் நாள் இந்தியாவிற்கு நல்ல நாள்.

மோடியின் நாக்கு மட்டுமல்ல, அழுக வேண்டிய அயோக்கியர்களின் நாக்குகள் இன்னும் நிறையவே இருக்கிறது.

No comments:

Post a Comment