Wednesday, May 22, 2024

கமல் கரீக்டாதான் சொன்னாரு மோடி

 


“கடவுள் இருக்காருன்னு சொல்றவங்களை நம்பலாம், கடவுள் இல்லைன்னு சொல்வறங்களையும் நம்பலாம், ஆனா நாந்தான் கடவுள்னு சொல்றவனை மட்டும் நம்பவே நம்பாதே”

இது கமலஹாசனின் வசூல்ராஜா, எம்.பி.பி.எஸ் படத்தின் வசனம்.

“நான் இயற்கையாக பிறக்கவில்லை. ஏதோ காரணத்திற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்”

என்பது மோடி லேட்டஸ்டாக உதிர்த்த முத்து.

இதன் மூலம் தன்னை ஒரு தெய்வப்பிறவி, அவதாரம் என்று மோடி சொல்லிக் கொள்கிறார். கொஞ்சம் கூட நம்புவதற்கு அருகதையே அற்ற ஜந்து என்பதற்கு மோடியின் இந்த வஜனமே போதும்.

இந்த ஜந்துவை ஏதோ காரணத்துக்காக பூமிக்கு அனுப்பி வைத்த பரமாத்மாவையும் நாம் எப்படி நம்புவது? இறை மறுப்புப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கிறார் மோடி.

உண்மையில் பாவம் ஹீரா பென் என்ற அந்த இறந்து போன மூதாட்டியே. ஏழைத்தாயின் மகன் என்ற வஜனத்துக்கு பயன்படுத்தப்பட்டார். பின்பு மோடியின் போட்டோ ஷூட்களுக்கு செட் பராபர்டியாக பயன்படுத்தப்பட்டார். நேற்று வரை கூட அவர் பெயரை தேர்தல் பிரச்சார ட்யலாக்குகளில் இணைத்துள்ளார். இப்போது அவருக்கு பிறக்கவில்லை என்று சொல்கிறார்.

எந்த ஒரு தாய்க்கும் இறப்புக்குப் பிறகு இப்படி ஒரு இழிவு வந்திருக்க வேண்டாம். அவர் அன்று கருக்கொலை செய்திருந்தால் இந்தியாவும் தப்பித்திருக்கும், அவரும் இழிவை தவிர்த்திருக்ககாம்.

No comments:

Post a Comment