Wednesday, May 22, 2024

அவகாசம் கொடுய்யா மோடி

 


மாலை பதிவாய் எதை எழுத?

சங்கி பொய்ப் பிரச்சார அணியின் தலைவன் சம்பித் பத்ரா, “பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர்” என்று பேசியதை எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.

அதற்குள்ளாக “பூரி ஜகன்னாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு போய் விட்டது” என்று மோடி பேசியது பற்றிய தகவலும் அதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினையாற்றிய தகவலும் கிடைத்தது.

அதை எழுத நினைத்தால் “நான் இயற்கையாக பிறக்கவில்லை, பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று தன்னைப் பற்றி பேசிக் கொண்டது தெரிய வந்தது.

நான் எதைப்பற்றி எழுத மோடி?

ஒரு நாளைக்கு ஒரு கண்டென்ட் போதும். நீர் வேலை வெட்டி இல்லாமல், இருந்தாலும் செய்யாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தி எடுப்பது போல உளறிக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் என்ன உம்மை மாதிரி வெட்டி ஆபிசரா?

கொஞ்சம் அவகாசம் கொடுத்து பேசுமய்யா . . .

அப்பறம் மோடி, ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு பரமாத்மா அனுப்பிய ஆள் நானென்று ஆன்மீகத்தை பரப்ப போயிடாதய்யா. வலைப்பதிவு எழுத உம்மை மாதிரி யார் கண்டென்ட் கொடுப்பாங்க! எதிர்க்கட்சி தலைவராக சீன் போடுமய்யா!

பிகு: மேலே சொல்லப்பட்ட மூன்று செய்திகளும் தனித்தனி பதிவாக வந்தே தீரும்.

1 comment:

  1. உச்சியில் கிறுக்கு
    உச்சத்தில் இருக்கு...

    ReplyDelete