Thursday, May 23, 2024

என்ன மோடி செட்டிங்கா????

 


ஒடிஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக பொய்ப்பிரச்சார அணியின் தலைவர் சம்பித் பத்ரா "பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர்" என்று வர்ணித்தார். மோடியும் அதனை புன்னகையுடன் பூரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

கடுமையான விமர்சனம் எழுந்ததும் சம்பித் பத்ரா அதை" ட்ங் சிலிப்" என்று சமாளிக்கப்பார்த்தார்.

மோடிக்கு ஒடிஷாவில் பெரிய பில்ட் அப் கொடுத்து தனக்கும் மோடியிடம் நல்ல பெயர் வாங்க சம்பித் பத்ரா செய்த நாடகம் என்றுதான் முதலில் நினைத்தேன்.

"நான் இயற்கையாக பிறக்கவில்லை. பரமாத்மாவால் ஏதோ ஒரு காரியத்துக்காக (இந்தியாவுக்கே காரியம் செய்யும் வேலையைத்தான் மோடி பத்தாண்டுகளாக செய்தார் என்பதுதான் உண்மை) பூமிக்கு அனுப்பினார்" என்று மிகப் பெரிய உடான்ஸை மோடி அவிழ்த்து விட்டவுடன்தான்  சம்பித் பத்ரா செய்தது மோடியின் பில்ட் அப் என்பது புரிந்தது.

அடுத்த நாள் மோடி அளக்கப்போகும் மிகப் பெரிய உடான்ஸிற்கு மக்களை மனதளவில் தயார் செய்ய நடத்திய செட்டிங்தான் "பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர்" என்ற முன்னோட்டம்.

சம்பித் பத்ராவின் அளப்பும் எடுபடவில்லை. மோடியின் உடான்ஸோ அவரை "தாயை பழித்த தனயன்" என்றாக்கி விட்டது.

அணையப் போகும் நெருப்பு இன்னும் என்னவெல்லாம் சீன் போடுமோ?

No comments:

Post a Comment