Friday, May 24, 2024

மோடியைக் கேள் முட்டாளே!

 


முதலில் மோடிக்கு நன்றி. இந்த பதிவை எழுத விடாமல் வேறு புதிய கண்டென்ட் எதையும் நேற்று கொடுக்காமல் இருந்தமைக்காக.

மோடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் திரித்து தமிழக மக்களை குழப்புகிறார் என்று ஆட்டுக்காரன் குற்றச்சாட்டு வைக்க, அனைத்து காவிக்கயவர்களும் அதை வழிமொழிகிறார்கள்.

மோடி சொன்னது என்ன?

பூரி ஜெகன்னாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி ஆறு வருடங்களுக்கு முன்பு களவாடப்பட்டு விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விட்டது.

இதற்கு என்ன அர்த்தம்?

அந்த பொக்கிஷ அறையின் சாவியை களவாடியது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அல்லது சாவியை களவாடியர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலம் கொடுத்துள்ளது.

இதைச் சொன்ன மோடியை கண்டிக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?

வி.கே.பாண்டியனை மனதில் வைத்து பேசியதாக சங்கிகள் கொடுக்கும் விளக்கம் எல்லாம் அயோக்கியத்தனம். அதை நேரடியாக சொன்னால் மோடி வாயில் அடக்கி வைத்திருக்கும் கொழுக்கட்டை கீழே விழுந்து விடுமா?

சங்கிகள் எல்லாம் முதல்வரை கண்டிப்பதற்கு பதிலாக மோடியின் சட்டையை பிடித்து "ஏன்டா ..........! தமிழ்நாட்டை இழிவு படுத்தினாய்?" என்று கேள்வி கேட்கட்டும்.


No comments:

Post a Comment