Sunday, July 3, 2022

மாலன் ஜெமோ ஊடல் ஓவரா?

 


ஏராளமான அமைப்பு வேலைகள், நூபூர் சர்மா, ஷிண்டே ஆகியோரால் மூமூமூத்தவர் வாங்கிய சாகித்ய அகாடமி விருது பற்றி எழுத இயலவில்லை.

சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருக்கும் போது தன்னுடைய நூலை "அது நோபலுக்கான இலக்கிய விருதிற்கே தகுதியான நூல்" ஆக இருந்தாலும் மாலன் பரிசீலனைக்கு உட்படுத்தி இருக்கக் கூடாது. பரிசீலனை செய்த குழுவில் அவர் இல்லையென்றாலும் கூட அவருக்கு விருது வழங்கப்பட்டது நிச்சயம் சரியில்லை.

சரி இது பற்றி அறம் அறம் என கதைக்கும் புளிச்ச மாவு ஆஜான் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன்.

மாலனுக்கு வாழ்த்து சொல்லி சிக்கனமாக முடித்து விட்டார். ஆனால் அதுவே அதிசயம்தான். மாலனெல்லாம் கமிட்டியில் இருப்பதால்தான் சாகித்ய அகாடமி உருப்படாமல் போகிறது என்று வசை பாடியவர் வாழ்த்து சொன்னது ஆச்சர்யமாகவும் இருந்தது.

என்ன இருந்தாலும் இருவருக்கும் ஒரே முதலாளிதானே! அதனால் ஊடலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்கள். . . .

No comments:

Post a Comment