Thursday, July 7, 2022

வாழ்த்த மனமில்லை ராஜா . . .


 போயும் போயும் இதற்குத்தானா?

மாநிலங்களவை நியமன உறுப்பினராவதற்கா தங்கமான தலைவர் அண்ணல் அம்பேத்கரை தரங்கெட்ட தரகன் மோடியோடு ஒப்பீட்டீர்?

மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமல்ல, அதற்கு மேலுமுள்ள பொறுப்புக்களுக்கு செல்லும் தகுதி உங்களுக்கு உண்டு. எம்.பி யாக அல்ல, மந்திரியாக அல்ல, பிரதமராக அல்ல, அதற்கும் மேல் இசையின் அரசனாக ஒரு மகத்தான இடத்தை தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு கொடுத்துள்ளனர். 

இந்த நியமனம் மூன்று மாதங்களுக்கு முன்பாக, உங்களின் மோசமான முன்னுரை வெளிவருவதற்கு முன்பாக நிகழ்ந்திருந்தால் அது இளையராஜா எனும் ஆளுமையின் திறமைக்கு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்கும்.

ஆனால் இப்போது?

நீங்கள் மறக்க நினைக்கிற அடையாளத்தை உங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கத்தான் உங்களை மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட வைத்தார்கள். உங்கள் மூலமாக தமிழ்நாட்டு தலித் மக்கள் மத்தியில் ஊடுறுவ முடியுமா என்ற முயற்சிக்கு பலியாகி விட்டீர்கள். இந்த நோக்கம் இல்லையென்று உங்களிடம் தரகு வேலை பார்த்த உங்கள் தம்பியை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

தமிழ்த்திரை இசையின் முகமான இளையராஜாவிற்கு கொடுக்கப் பட்ட பதவி அல்ல இது. மோடி எனும் மோசடி மனிதனுக்கு முலாம் பூசியதற்கு கொடுக்கப்பட்ட கைமாறு.

அதனால் உங்களை வாழ்த்த மனமில்லை.

உங்கள் மீது அப்போதும் இப்போதும் குவியும் விமர்சனங்களும் கண்டனங்களும் உங்களை பிடிக்காத காரணத்தால் அல்ல. நமக்கு மிகவும் பிடித்த, நாம் நேசிக்கிற ஒரு மனிதர் தவறான பாதையில் பயணிக்கிறாரே என்ற ஆதங்கத்தால்தான். 

பிகு: ஓவியம் தோழர் ரவி பாலேட்


No comments:

Post a Comment