Sunday, July 31, 2022

சாமியைக் கேட்டீங்களா ஆபீஸர்ஸ்? தெய்வக் குற்றமாயிடுச்சே!

 


கோயிலுக்கு அருகில் இருக்கிறது என்ற காரணம் சொல்லி சேலத்தில் ஒரு மாட்டுக்கறி கடையை மூட வேண்டும் என்று இந்து முன்னணியினர் கலாட்டா செய்ததால் கார்ப்பரேஷ்ன், காவல்துறை எல்லாம் சேர்ந்து அந்த கடையை மூடி விட்டார்கள்.

கலவரம் செய்வோம் என்று சொன்னவர்களை கைது செய்து உள்ளே தூக்கிப் போட துப்பில்லாதவர்களாக அரசு நிர்வாகம் இருப்பது ஆபத்தானது. அண்டா பிரியாணி திருடர்களை வளர்க்கிறார்கள்.

நிற்க, அது என்ன கோவில் (எந்த கோயிலாக இருந்தாலும் அரசு செய்தது தவறுதான் என்பது வேறு விஷயம்)  என்று பார்த்தால்  அது


ஏன்யா சுருட்டும் சாராயமமும் எடுத்துக் கொள்கிற முனியப்ப சாமி, ஃபீப் சில்லி மட்டும் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

அடப்பாவிகளா, இந்து முன்னணிக்கு பயந்து இப்படி தெய்வக்குற்றம் செஞ்சுட்டீங்களே!


No comments:

Post a Comment