Sunday, July 3, 2022

நீதிபதிகளை மிரட்டும் சங்கிகள்

 


நூபூர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது சங்கிகள் பொங்கி எழுந்துள்ளனர். அவர்கள் இருவரையும் பணி நீக்கம் (Impeachment) செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மின்னஞ்சல் அனுப்பச் சொல்லி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். சங்கியாக மாறிப்போன ஒரு தூரத்து உறவினரின் முக நூல் பக்கத்தில்தான் இதைப் பார்த்தேன்

அநேகமாக இந்த ஏற்பாடே கிரிமினல் பேர்வழியான உள்துறை அமைச்சரின் ஏற்பாடாகத்தான் தோன்றுகிறது.

அந்த மின்னஞ்சலில் கடைசியாக சொல்லி இருப்பதுதான் அக்மார்க் மிரட்டல். அதன் ஸ்க்ரீன் ஷாட் இங்கே


"நூபூர் சர்மாவுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ அல்லது அவரது ஆதரவாளர்களுக்கோ ஏதாவது ஏற்பட்டால் நீதிபதிகள் சூர்யகாந்தும் ஜேபி பார்டிவாலா வுமே முழுமையான பொறுப்பு என்று கருதப்பட்டு அவர்கள் மீதான குற்ற வழக்கு பொது நீதிமன்றங்களில் நடக்கும்."

இதுதான் அந்த மிரட்டல். சரியான அபத்தமாக தோன்றினாலும் அதை ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனென்றால் காவிக்கயவர்கள் நாற்காலிக்காக எந்த படுபாதக செயலையும் செய்ய தயங்க மாட்டார்கள். 

நூபூர் சர்மாவால் இந்தியாவுகுத்தான் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்ற சொன்ன நீதிபதிகளின் பாதுகாப்புக்கு இப்போது சங்கி அயோக்கியர்களால் அச்சுறுத்தல் வந்துள்ளது.

அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று எவனெல்லாம் மின்னஞ்சல் அனுப்பினானோ அவர்கள் அத்தனை பேரையும் கைது செய்து உள்ளே தள்ளினால்தான் இந்தியா உருப்படும். வெறுப்பரசியல் செய்யும் காவிக்கயவர்களும் கட்டுப்படுவார்கள். 

பிகு: நூபூர் சர்மா உதிரி நபர் என்று நீதிபதிகள் கருதுவது சரியல்ல. மோடி எனும் மிகப் பெரிய மோசடிப் பேர்வழியால் வழி நடத்தப்படும் கேவலமான அரசியல் கட்சியின் அங்கம் என்று நேற்று எழுதியிருந்தேன். இப்போது அதனை நீதிபதிகளும் உணர்ந்திருப்பார்கள்.


No comments:

Post a Comment