Friday, July 22, 2022

வாய்ப்பில்லை ஜட்ஜய்யா . . .

 


மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி மோதல்களை உருவாக்கும் வகையில் வெறுப்புப் பேச்சு எனும் விஷத்தை கக்குபவர்கள் மீது ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற பட்டியலை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று சொல்லியுள்ளது.

ந்ரேந்திர மோடி தொடங்கி ஐ.டி செல் தரும் செய்தியை பகிர்ந்து கொள்ளும் முட்டாள் சங்கி வரை அத்தனை பேருமே விஷம் கக்கும் கயவர்கள். நூபூர் சர்மா எல்லாம் அந்த நச்சுக்கடலின் சிறு துளி அவ்வளவுதான்.

நேற்று கூட ஒரு ஐ.டி செல் பகிர்வை பார்த்தேன். அக்னிபாத்தில் 80 % முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் சேர்ந்துள்ளார்கள். துப்பாக்கி படத்து ஸ்லீப்பர் செல்கள் என்ற ஒரு கேவலமான, கீழ்த்தரமான பகிர்வை பார்த்தேன். இது போன்ற வெறியர்களை ஊக்குவிப்பதே பாஜகவின் பிரதான வேலை. 

அப்படி இருக்கையில் கட்சிக் கொள்கையை அமலாக்கும் வெறி பிடித்த பாம்புக்குட்டிகள் மீது தலைமைப்பாம்பு என்ன நடவடிக்கை எடுக்கும்?

அதனால உங்களுக்கு பதில் கிடைக்க வாய்ப்பில்லை ஜட்ஜய்யா!

எச்.ராசா ஐகோர்ட்டை சொன்ன மாதிரி உங்களை சொல்லாம இருந்தா சரி.

அதற்குக் கூட வாய்ப்பில்லை. நூபூர் சர்மா வழக்கு போது வெறியனுங்க ஏற்கனவே திட்டிட்டாங்க. 

No comments:

Post a Comment