Tuesday, April 28, 2015

பேரழிவின் போது பிதற்றல்கள் வேண்டாம்

 

நில நடுக்கத்தில் நேபாளம் நிலைகுலைந்திருக்கிறது. அழிவின் தடம் எங்கெங்கும் காணப்படுகிறது. சிதைவுகளுக்கிடையே  சிக்கிக் கொண்ட பிரேதங்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

சடலங்களைத் தேடி பிணந்தின்னிக் கழுகுகள் அலைவது போல இந்த துயரமான நேரத்திலும் மத வெறிக் கழுகுகள்  தங்கள் மத வெறி செயல்திட்டத்தை அரங்கேற்றப் பார்க்கின்றனர்.

இதிலே மத வெறியர்கள் தங்களுக்குள் பேதமில்லை என்பதை நிரூபிக்கின்றனர். 

மாட்டுக் கறி சாப்பிட்டதால்தான் இந்த நில நடுக்கம் என்று இந்தியாவின் இந்து மத வெறி சாமியார்கள் சொல்லும் போது பைபிளின் வார்த்தைகள் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்காவின் பாதிரியார் ஒருவர் உளறியுள்ளார்.

உங்கள் மதவெறியை பரப்புவதற்கான நேரம் இதுவல்ல மூடர்களே, விலகியிருங்கள். மனிதம் தேவைப்படும் நேரம் இது.

2 comments:

  1. இயற்கை அழிவு கொடுமையானது அதை பயன்படுத்தி மக்களை பயமுறுத்தி மதவாதிகள் பயன் பெற முயற்சிக்கிறார்கள்.

    ReplyDelete