Tuesday, April 21, 2015

காலையில் படித்த குட்டிக் கதை

முகநூலில் தோழர் கடலூர் புருஷோத்தமன் பகிர்ந்து கொண்ட ஒரு குட்டிக்கதையை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மதத்தை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் படித்தால் நல்லது.

ஒரு குட்டி கதை..



ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழயில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள்  இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின, சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன . வழயில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன. இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின. 

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர். ஒரு குஞ்சி புறா தாய் புறாவிடம் கேட்டது ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று. 

அதற்கு அந்த தாய் புறா சொன்னது நாம் இங்கு இருந்தபோதும் புறா தான், சர்ச் போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறாதான் , அனால் மனிதன் கோயிலுக்கு போனால் "இந்து". சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்", மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது. 

குழம்பிய குட்டி புறா அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும் என்றது. அதற்க்கு தாய் புறா  இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கிழே இருக்கிறார்கள் என்றது. 

(மனிதனுக்கு மதத்தின் பேரில் மதம் பிடித்திருக்கிறது, )...மதப்பேயை விரட்டி மனிதநேயம் பாதுகாப்போம்.

3 comments:

  1. புரிகிறது. ஆனால் கஷ்டம்.

    ReplyDelete
  2. நல்ல கதை.அது புறா. புறாக்களுக்கு மதம் இல்லை. சில நாட்களுக்கு முன் உண்மையிலேயே நடந்தது, ஆபிரிக்காவில் இருந்த மனிதர்கள் சிலர் அங்கே நடைபெறும் மத சண்டை வறுமை காரணமாக வாழ முடியாம ஐரோப்பாவை நோக்கி அகதியா கப்பலில் புறப்பட்டனர் கப்பலில் மத விரோதம் அதிகரிக்கவே 12 ஆபிரிக்க கிறிஸ்தவ அகதிகளை ஆபிரிக்க இஸ்லாமிய அகதிகள் தூக்கி கடலில் எறிந்து கொலை செய்துள்ளனர் இப்போ இத்தாலிய போலிஸ் மத வெறுப்பால் செய்யபட்ட கொலை என்று பல அகதிகளை கைது செய்து உள்ளது,மத கொடுமைகளில் இருந்த தப்பி வேறு இடத்துக்கு அடைக்கலம் தேடி போகும் போதே மத வெறியோடு செல்பவர்கள் மனிதர்கள்.

    ReplyDelete
  3. ஆகா
    அதனால்தான் நாம் கீழேயே இருக்கிறோம்
    என்றுதான் மனிதனாகப் போகிறோமோ
    அருமையான கதை
    நன்றி

    ReplyDelete