Thursday, April 16, 2015

ஐந்து லட்சமும் இரண்டாம் இடமும்





2009 ம் வருடம் வலைப்பக்கம் துவக்கினேன். இரண்டு பதிவுகளோடு முடிந்து போனது. 2010 ல் அவ்வளவாக எழுதவில்லை. 2011 முதல்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.

கடந்த வாரம் எனது வலைப்பக்கம் இரண்டு முக்கியமான மைல்கல்களை எட்டியுள்ள மகிழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ் மணம் வெளியிடுகிற தர வரிசையில் இரண்டாம் இடத்திற்கு எனது வலைப்பக்கம் வந்தது ஒரு மகிழ்ச்சி என்றால் ஹிட்ஸ் என்று அழைக்கப்படுகிற பார்வைகளும் ஐந்து லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.

பெரும்பாலும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எனது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நான் சார்ந்திருக்கிற இயக்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்குமான இடமாகவே நான் வலைப்பக்கத்தை பயன்படுத்தி வருகிறேன். எனது பல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சரியான தளமாக வலைப்பக்கம் இருந்து வருகிறது.

ஆரோக்கியமான விவாதங்களும் இங்கே வந்துள்ளது. அநாகரீகமான அனாதயேங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுவற்காக தொடர்ந்து  படிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்பதும் எனக்கு கிடைத்த நல்ல வரமாகவே பார்க்கிறேன்.

நான் தொடர்ந்து எழுத தொடர்ந்து உற்சாகமளிக்கிற பதிவுலக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இனியும் உங்கள் ஆதரவைத் தொடர கோருகிறேன்.

6 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்
    சாதனைகள் பல புரியட்டும்

    ReplyDelete
  2. Vaazthukkal Sir...

    Regards,
    A Yusuf

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    ReplyDelete