Wednesday, April 15, 2015

பெரியாருக்கல்ல இழிவு! அந்த சிறியோருக்குத்தான்





காவிப்படை என்ற காலிகளின் படை போராட்டம் என்ற பெயரில் பெரியாரை இழிவுபடுத்துவதாக்க் கருதி ஒரு இழிவான செயலை செய்துள்ளனர்.

இதன் மூலம் பெரியாருக்கு எந்த இழிவும் கிடையாது. மனிதன் விழிப்புணர்வு அடைய வேண்டும், சுய மரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளின் இறுதிநாள்வரை உழைத்திட்ட ஒரு உன்னதமான மனிதனைப் பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகள் என்று அவர்கள் தங்களையே அம்பலப்படுத்திக் கொண்டு அசிங்கப்பட்டிருக்கிறார்கள், அந்த அடிமைக் கூட்ட்த்தின் அங்கத்தினர்கள்.

காட்டுமிராண்டி என்று பெரியார் கூறியது மிகச் சரியானது என்பதை அவர்களே நிரூபித்து விட்டார்கள்.

சிந்தனைகளில் நாற்றமடிப்பவர்கள் செயல் மட்டும் மணக்க்க் கூடியதாகவா இருக்கும்?

மத்தியிலே ஆட்சி இருக்கிறது என்ற திமிர் தவிர வேறு எதுவும் இதற்குக் காரணம் கிடையாது.

மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

மோடிக்கு வாக்களித்த புத்திசாலிகளே(!), இதற்கு நீங்கள்தான் பொறுப்பு. உங்களது அதி புத்திசாலித்தனத்தால் இன்னும் எத்தனை தரக்குறைவான காட்சிகளை தேசம் காண வேண்டியிருக்குமோ?

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஒரு காலிக்கூட்ட அனாமதேயம் நாங்கள் ஆபாசப் பேர்வழிகள்தான், நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் என்று தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டு போயிருக்கிறது

      Delete
  2. பெரியார் பெரியார்தான். அவர் நோக்கம் பழுதில்லை. அவரை வைத்துப் பிழைப்பு நடத்தும் வீரமணிகளுக்கோ, திராவிட இயக்கங்களுக்கோ இது பொருந்தாது.

    ReplyDelete