Saturday, April 25, 2015

ஜெயமோகனுக்கு அருகதையே கிடையாது





உயிர்மை இதழ் இந்த ஆண்டு அறிவித்துள்ள சுஜாதா விருதுகள் தொடர்பாக ஜெயமோகன் தெரிவித்த விஷ(ம)த்தனமான கருத்துக்கள் தொடர்பாக இணையத்தில் பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துருக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துருக்களை (English Fonts) பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரிய ஆலோசனை அளித்து தமிழ் மொழியை சவக்குழிக்கு அனுப்ப ஆசைப்பட்ட ஜெயமோகன் என்ற எழுத்து வணிகருக்கு தமிழ் மொழி பற்றியோ அல்லது தமிழ் இலக்கியம் பற்றியோ அல்லது தமிழில் வழங்கப்படும் விருதுகள் பற்றியோ கவலைப்படவோ அல்லது கருத்து சொல்லவோ எந்த அருகதையும் கிடையாது.

குப்பை போல தூக்கியெறியப் பட வேண்டிய மனிதருக்கு பதில் சொல்லி, விளக்கம் அளித்து மனுஷ்ய புத்திரன் தனது நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் மீது வயிற்றெரிச்சல் பட்டு வன்மத்தோடு பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டுமே சிலரின் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

கௌரவ வம்சத்தை அழிக்க வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் கொண்டே கௌரவர்களோடு பழகி துரியோதனனை வெறியேற்றினான் என்று சகுனி பற்றி சொல்வார்கள். அது போல தமிழில் எழுதிக் கொண்டே தமிழ் இலக்கிய உலகை சீரழிக்க வந்த கோடாரிக் காம்பு என்ற பெருமை ஜெயமோகன் தவிர வேறு யாருக்கு உண்டு?

3 comments:

  1. Among contemporary Tamil writers, JM occupies a top position. He is a major force in elevating Tamil writing to a higher level. JM, as a prolific and professional Tamil writer has every right to express his views on Tamil literary awards. Quite probably, many might not see eye to eye with the opinion of JM. However, It is quite wrong to say that JM is NOT competent to express his views, frank and free. If only critics understand that world is not just divided into black and white; there are various shades of gray in between. Overall, a very injudicious write up.

    ReplyDelete
  2. எவ்வளவு தான் சர்க்கரை, பருப்பு, இன்ன பிற சுவையங்கள் சேர்த்து பாயாஷம் கிண்டி அதை படைத்தாலும், அதில் கொஞ்சம் நஞ்சைப் போட்டு பரிமாறினால் அது உலகில் எவ்வளவு டாப் பாயாஷமாக இருந்தாலும் அது வெறும் விஷமே. ஜெயமோகனது எழுத்தின் தரம் எவ்வளவு உயர்வு என்றாலும் அதில் தமிழிற்கு எதிராக கொஞ்சம் விஷம் போட்டு பரிமாறினால் அது எவ்வளவு டாப் என்றாலும் வெறும் நஞ்சே அதைத் தின்ன முடியாது குப்பையில் தான் வீச வேண்டும். புரிந்ததா ..

    ReplyDelete
  3. தமிழை அழிக்கவே தமிழில் எழுதும் கோடரிக் காம்பு ஜெயமோகன்.

    ReplyDelete