Sunday, March 31, 2013

கருணாநிதி பெற்றது என்பதால் இந்த கதியா?

இன்று ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தி இது.



சென்னை மாநகரக் காவல்துறைக்காக ஹுண்டாய் நிறுவனம்
இலவசமாக  வழங்கிய  கார்களில் பல பயன்படுத்தப்படாமல்
தூசி படிந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

இதை ஒழுங்காக பராமரித்தால் இன்னும் பல ஆண்டுகள்
பயன்படுத்த முடியும் என்றாலும் அதைச் செய்யாமல்
இப்போது புறக்கணித்து விட்டது காவல்துறை.

கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்டது என்பதற்காக
ஜெ காலத்தில் இந்த கார்கள் புறக்கணிக்கப் படுகின்றதா?

இந்த கார்களை வாங்கிய விசுவாசத்தால்தான் ஹூண்டாய்
நிறுவனத்திற்கு ஆதரவாக வாலாட்டிக் கொண்டு
போராடிய தொழிலாளர்களை காவல்துறை பல முறை
தாக்குதல் நடத்தி சிறைக்கு அனுப்பியது.

அப்படிப் பட்ட கார்களுக்கே இந்த கதி!

2 comments:

  1. எல்லாவற்றிலும் அரசியல்!

    ReplyDelete
  2. தோழர். இதை மருத்துவமனைக்குப் பயன்படுத்த முடியுமா?.

    ReplyDelete