Friday, March 8, 2013

இந்த கயவனுக்கு சிலை வேறு ஒரு கேடு.....


படத்தில் சிலையாய் உள்ளவன் பெயர் கர்த்தாம் சூர்யா.
சட்டிஸ்கர் மாநில அடியாள் படையான சல்வா ஜூடமின்
உறுப்பினராக இருந்து பிறகு போலீஸானவன்.

இவன் மீது ஏராளமான பாலியல் வன் கொடுமை புகார்கள்
உண்டு. இவன் போலீசான பின்பு மாவோயிஸ்டுகளோடு
நடந்த ஒரு எண்கவுன்டரில் இறந்து போனதால்
தியாகியாகி விட்டான். அவனது சொந்த ஊரில் அவனுக்கு
ஒரு சிலை. அதை மாவட்ட எஸ்.பி திறந்து வைக்கிறார்.

இதை ஹிந்து நாளிதழில் படிக்கும் போது ரத்தமெல்லாம்
கொதிக்கிறது. இப்படி கயவர்களுக்கு தியாகிகள் அங்கீகாரம்
கொடுத்தால் இவர்களைப் போன்றவர்களின் கொட்டம்
அதிகரிக்காதா?

முன்னாள் சல்வா ஜூடம் அடியாட்கள், இன்னாள் போலீஸ்கள்
மீதான் பாலியல் வன் கொடுமை புகார்களை பழங்குடி இனப்
பெண்கள் வாபஸ் வாங்குகிறார்களாம்.

தண்டனை கொடுக்கப்பட வேண்டிய கிரிமினல்களை
காவலர்களாக்கி, தியாகியாக்கினால் அந்த அப்பாவி
மக்களுக்கு யார் பாதுகாப்பு?

பி.கு : பி.வாசு சார் என்னை மன்னித்து விடுங்கள், 
வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலிக்கு 
(பொன்னம்பலம் பாத்திரம்) சிலை வைக்கும் போது
கொஞ்சம் ஓவர் என நினைத்தேன். உங்கள் கற்பனையெல்லாம்
இந்த கயவர்கள் முன்பு ஒன்றுமே கிடையாது. 

No comments:

Post a Comment