Friday, March 16, 2012

ஐந்து ரூபாய் முதல் போட்டா ஆயிரத்து நூற்று முப்பத்தேழு ரூபாய் லாபம்.




கனவல்ல, கதையல்ல, நிஜம் நிஜம் நிஜம்

1956 ம் ஆண்டு எல்.ஐ.சி நிறுவனத்தில் அரசு ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்கு எல்.ஐ.சி ஒவ்வொரு வருடமும் தனது லாபத்தில் ஐந்து சதவிகிதம் அரசுக்கு அளிக்கும். மீதமுள்ள தொகை பாலிசிதாரர்களுடைய பாலிசி கணக்கில் சேர்க்கப்படும்.

கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி யின் லாபத்தில் அரசுக்கு சேர வேண்டிய தொகையான ஐந்து சதவிகிதப் பங்கு 1137,99,41,904 ரூபாய் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் அதிகாரிகளால்
அளிக்கப்பட்டது.

இந்த ஆயிரத்து நூற்று முப்பத்தேழு கோடியே, தொன்னூற்றி ஒன்பதே லட்சத்து நாற்பத்தி ஓராயிரத்து தொள்ளாயிரத்து நான்கு ரூபாய் என்பது 2010 – 2011 ஆண்டிற்கு மட்டுமான தொகையே.

இது போல ஒவ்வொரு ஆண்டும் எல்.ஐ.சி அரசுக்கு லாபத்தொகையாக, வரியாக, அரசு பத்திரங்களில் முதலீடாக வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தைத்தான் மத்தியரசு தனியாருக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது. ஐ.ஆர்.டி.ஏ அன்றாடம் முட்டுக்கட்டைகள் போடுகின்றது. ஏன் பல மாதங்களாக சேர்மனைக் கூட நியமிக்காமல் மத்தியரசு தாமதம் செய்து வருகின்றது.

பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக சிறப்பாக செயல்படும் இந்திய நிறுவனத்தை அழிக்கப்பார்க்கும் தேச பக்த அரசல்லவா, காங்கிரஸ் அரசு!!!


2 comments: