Thursday, March 15, 2012

மம்தாவின் மாயாஜால நடிப்பிற்கு ஆஸ்கார் விருது



மாற்றம் என்ற முழக்கம் வைத்த மம்தா தீதி ரயில்வே அமைச்சரை
,மாற்றி விட்டார். ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப் பட்டது மிகப்
பெரிய கொடுமை, அராஜகம். அதனைக் கண்டிக்க வேண்டும். குறைக்க
வேண்டும் என போராட வேண்டும்.

ஆனால் அதற்கும் எனக்கும் சம்பந்தம்  இல்லை என மம்தா அக்கா
போடும் நாடகம் இருக்கிறதே, அதற்கு எத்தனை ஆஸ்கார் விருது
கொடுத்தாலும்  தகும்! திரிணாமுல் கட்சியில் அத்தனை பேரும் அவரது
அடிமைகள்தான். 


இவருக்கு தெரியாமல் மந்திரி கட்டணத்தை உயர்த்தி விட்டார் என
சொல்வது நடிப்பு, நடிப்பு, நடிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இவருக்கு தெரியாமல் இவர் கட்சி மந்திரி பட்ஜெட்டை போடுவாராம்.
அதை இவர் கண்டிப்பாராம், மந்திரியை மாற்றுவாராம். 


இவரை நம்பி வோட்டு போட்ட மேற்கு வங்க மக்கள் கேணையர்கள்
என்று நினைப்பு. என்னமா வேஷம் கட்றாங்க,


பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு பிளாக்மெயில் நாடகம்
நடத்தும் இந்த உத்தம புத்திரியின் மிரட்டலுக்கு மன்மோகன்சிங்கம்
என்ன பதில் சொல்லப்போகின்றது.


இடதுசாரிகள் மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்ததை
நான் அடிமைச்சங்கிலியில் பிணைக்கப்பட்டதாக சொன்ன அந்த
தன் மானச்சிங்கம் இப்போது என்ன சொல்லப்போகின்றது?

1 comment:

  1. தன்மான சிங்கம் என்னும் உங்கள் வஞ்சப் புகழ்ச்சி அணி சூப்பர்

    ReplyDelete