Monday, April 15, 2024

அனைவரும் அமைச்சராயிடுவாங்கய்யா . . .

 


இன்று சாலையை கடக்கையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் பிரச்சாரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஏ.சி.சண்முகம் " ஆல் இன் ஆல் அழகுராஜா நல்லவரு, வல்லவரு" என்று கவுண்டமணி ஸ்டைலில் பேசிக் கொண்டிருந்த ஒருவர் நீங்க ஓட்டு போடப் போறது எம்.பி க்கு இல்லை, மந்திரிக்கு என்று ஒரு பெரிய ஐஸ் பாரை தூக்கி அவர் தலையில் வைத்தார்.

நீங்கள் அமைச்சருக்குத்தான் ஓட்டு போடப்போறீங்க என்று சங்கிகள் இதுவரை 

ஆட்டுக்காரன்,

பொன்னார்,

டமில் ம்யூசிக்

எல்.முருகன்,

நயினார் நாகேந்திரன்

கார்த்தியாயணி

சௌம்யா அன்புமணி

ஏ.சி.சண்முகம்

பாரிவேந்தர்

போலி பேராசிரியர் ராம.சீனு

ஆகியோரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் யாரும் வெல்லப்போவதில்லை. மோடியும் வெல்லப் போவதில்லை.

பின் என்ன தைரியத்தில் எல்லோரும் அமைச்சர் கனவில் மிதக்கிறார்கள்?

முகமது பின் துக்ளக் திரைப்படத்தில் சோ எப்படி அனைத்து எம்.பி க்களையும் துணைப் பிரதமராக்கினாரோ அது போல மோடி பின் துக்ளக் அமைச்சராக்கிடுவார் என்ற நம்பிக்கையோ!

No comments:

Post a Comment