Tuesday, April 2, 2024

இப்படி செஞ்சிட்டீங்களே ஜட்ஜய்யா . . .

 


உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய பல தீர்ப்புக்கள் நன்றாக இருக்கிறதே என்று நேற்றுதான் நினைத்தேன். ஒரு நம்பிக்கையும் வந்தது.

இன்று காலை செய்தித்தாளைப் பார்த்தால் நம்பிக்கையில் ஒரு ஓட்டை.

வாரணாசி ஞானவாபி மசூதியின் ஒரு அறையில் லிங்கம் என்று சொல்லப்படுகிற நீரூற்று மையத்தை  இந்துக்கள் வழிபடலாம் என்று பணி ஓய்வு நாளன்று தீர்ப்பு அளித்து அடுத்த பதவியை ஒரு நீதிபதி பெற்றது நினைவில் உள்ளதா?

அந்த தீர்ப்பின் படி அந்த வழிபாடு தொடரலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.

இது நியாயமாரே?


No comments:

Post a Comment