Tuesday, April 2, 2024

அவமரியாதை ஸ்கெட்ச் அத்வானிக்கானது . . .

 


நேற்று முழுதும் சமூக வலைத்தளங்கள், கீழேயுள்ள படத்தை பகிர்ந்து மோடியை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.


குடியரசுத்தலைவர் நின்று கொண்டு அத்வானிக்கு விருது தருகையில் மோடி சொகுசாக உட்கார்ந்து கொண்டு ஜனாதிபதியை அசிங்கப்படுத்தி விட்டார் என்பதுதான் மோடி மீதான குற்றச்சாட்டு.

அது உண்மைதான்.

மோடி ஜனாதிபதியை அசிங்கப்படுத்துவது ஒன்றும் புதிதல்லை. பழங்குடி இனத்தவரைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கினேன் என்று சீன் போட்டாரே தவிர, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் ராமர் கோயிலுக்கெல்லாம் அழைக்கவே இல்லை.

ஆனால் நேற்று மோடி முக்கியமாய் அவமதித்தது அத்வானியை . . .

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அத்வானி அழைக்கப்படவில்லை. பாபர் மசூதியை இடித்தவருக்கே இந்நிலையா என்று அத்வானிக்கு அனுதாபம் ஏற்பட்டதை திசை திருப்ப கொடுக்கப்பட்டதே பாரத ரத்னா.

"சாமி" படத்தில் விவேக் சொல்வாரல்லவா" இந்த கழுதை கல்யாணத்துக்கு இந்த மந்திரம் போதும்" என்பது போல பாரத ரத்னா விருதே அத்வானிக்கு அதிகம், இதுல எழுந்து வேற நிக்கனுமா என்பதுதான் மோடியின் நிலை.

இதிலே பாவம் ஜனாதிபதியும் சேர்ந்து அசிங்கப்பட்டு விட்டார். 

No comments:

Post a Comment