Monday, April 22, 2024

மோடியின் பேச்சு அயோக்கியத்தனமாது.

 


தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.

 முதல் முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.

 புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப்ப்டை வீரர்கள் கொல்லப்படுவதை அனுமதித்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

 இனி பொய்களையும் அள்ளி விட முடியாது. ராணுவ வீரர்களையும் சாகடிக்க முடியாது.

 அதனால் மோடி கையிலெடுத்திருப்பது மத வெறிப் பேச்சு.

 “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  நாட்டு மக்களுடைய செல்வத்தை எல்லாம் பிடுங்கி  இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்”

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள், தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அவர் சொல்லும் விஷயங்களுக்கு அவரிடம் எந்த தரவுகளோ, ஆதாரங்களோ கிடையாது.

 வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தானது. பிளவு படுத்தும் நோக்கமுடையது. ஒற்றுமையை குலைக்கக் கூடியது. வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை  உருவாக்கக்கூடியது. வெறுப்பை விதைக்கும் விஷம். மொத்தத்தில் அயோக்கியத்தனமானது.

 இந்த அயோக்கியத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதனால் மக்கள்தான் மோஈடியை முறியடிக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment