Sunday, April 14, 2024

மோடியின் கூடா நட்பால் . . .

 


உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அரசான இஸ்ரேல் அரசுடன் இந்தியா வாஜ்பாய் காலம் வரை விலகியே நின்றது. மோடியோ ஒட்டி உறவாடினார். மோடி, ட்ரம்ப், நெதன்யாகு என மூவருமே வெறி பிடித்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .

இஸ்ரேலின் உதவியோடுதான் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் ஆகியோரை வேவு பார்த்தது மோடி அரசு.

அதெல்லாம் போகட்டும்.

இஸ்ரேலுடன் மோடி கொண்ட கூடா நட்பு இந்தியர்களுக்கு கேடாக முடிந்துள்ளது.

பல முனைகளில் இஸ்ரேலுக்கும் மற்ற நாடுகளுக்கும் பிரச்சினை, மோதல், அவ்வப்போது போர்.

பாலஸ்தீனத்துடனான போர் ஒரு புறம் என்றால் இரானுடனான போர் இன்னொரு புறம். 

கட்டுமானப் பணிகளுக்காக உபி தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அவர்கள் சில ஆயிரம் பேர் அங்கே சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதைத் தவிர இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க தயார் செய்யப்பட்டவர்கள், அதற்கான விமானக் கட்டணம் உட்பட லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி செலுத்தி இப்போது பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து நிற்கிறார்கள் சில ஆயிரம் பேர்.

இந்த தருணத்திலும் கூட இஸ்ரேலுக்கு ஆள் பிடிக்கும் வேலை தொடர்வதாக தகவல்கள் வருகிறது.

மோடியின் கூடா நட்பு அவருக்கு கேடாய் அமைந்தால் தவறில்லை. அவர் பிரதமராய் இருந்து தொலைப்பதால் இந்திய மக்களுக்கு கேடாகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து துரத்த வேண்டும் என்பதற்கு இஸ்ரேல் நட்பும் ஒரு காரணம்.

No comments:

Post a Comment