Saturday, March 6, 2021

ஆஜானை சிறையிலடைப்பதே சரி

 


ஜெமோவின் அயோக்கியத்தனம் – லேட்டஸ்ட்

புளிச்ச மாவு ஆஜான் எழுதுவது எல்லாமே அயோக்கியத்தனம்தானே என்பதால் இது லேட்டஸ்ட் என்று தனியாக சொல்ல வேண்டியுள்ளது.

சிறுபான்மையினர் மீது விஷத்தை கக்குவதில் அவர் நேரடி சங்கிகளுக்கு சளைத்தவரல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

சில மாதங்களுக்கு முன்பு பா.செயப்பிரகாசம் அவர்களை இவர் ஜாதி வெறியர் என்று சொல்லி ஒரு சர்ச்சை வந்த போது ஆஜான் எழுதிய பதிவு கீழே உள்ளது.

நடக்காத தாக்குதல் குறித்து அவர் இவ்வாறு சொல்கிறார்.

சென்ற ஆண்டு என் மேல் தாக்குதல் தொடுக்கப்பட்ட போது இணையத்தில் ஒரு பெருங்கும்பல் கொண்டாட்டமிட்டது. கேலி, கிண்டல், வசைகள். அப்போது ஒரு நண்பர், கணிப்பொறித்துறையின் மிக உயர் பதவியில் இருப்பவர், அப்படி களியாட்டமிட்டவர்களின் முழுப் பட்டியலை எடுத்து எனக்கு அனுப்பினார்.

 அவ்வாறு வசைபாடியவர்களில் பெரும்பாலானவர்கள் மாற்று மதத்தவர். வெறும் மதக் காழ்ப்புதான் அவர்ககளின் உந்து சக்தி. அவர்கள் திக, திமுக, கம்யூனிஸ்ட் என பல வேடமிட்டிருக்கலாம். அடிப்படையில் கிறித்துவ, இஸ்லாமிய மதத்தவர்.

 இவரை விமர்சிப்பவர்கள் அனைவரையும் கிறித்துவ, இஸ்லாமிய மதத்தவர் என்ற சிமிழுக்குள் அடைத்து இவர் மீதான தாக்குதலுக்கு மதக் காழ்ப்புணர்வே காரணம் என்று தன்னை தியாக சீலராக காண்பித்துக் கொள்ளும் முயற்சி இது.

 இதே உத்தியை மீண்டும் இப்போது  இன்னும் மோசமாக கடைபிடித்துள்ளார்.

 இந்துத்துவ அமைப்பின் பொறுப்பில் இருக்கிற ராஜசங்கர் விஸ்வநாதன் என்ற ஒருவர் அவரை “எச்ச பொறுக்கி” என்று திட்டியது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று செல்ஃபி கேள்வியாக ஒருவர் கேட்கிறார். அந்த ராஜசங்கரின் பதிவு  இவரது செல்ஃபி கேள்வியில் உள்ளது. அதன் ஸ்க்ரீன் ஷாட் இங்கே உள்ளது.

 


இதற்கு ஆஜான் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

 அந்த ராஜசங்கர் விஸ்வநாதன் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இடதுசாரிகளுக்கு வாசிப்பு இல்லை, உப்பு இல்லை, புளி இல்லை என்ற பழைய பல்லவியை பாடி விட்டு கடைசியாக ஒன்று சொல்கிறார் பாருங்கள்.

 





இங்கேதான் நிற்கிறது ஆஜானின் அயோக்கியத்தனம்.

தன்னை எதிர்ப்பவர்கள் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று முன்பு கூறியவர் இப்போது ஈவேரா (கவனிக்கவும் பெரியார் அல்ல), மார்க்ஸ், அம்பேத்கர் படங்களை வைத்துக் கொண்டு இந்து வெறுப்பையும் இந்திய வெறுப்பையும் கக்குபவர்கள் அதி தீவிர பெந்தேகொஸ்தே கிறித்துவர்களும் (மற்ற பிரிவு கிறித்துவர்களோடு ஆஜான் ஏதாவது பேக்கரி டீலிங்கிற்கு வந்து விட்டாரா?)  இஸ்லாமியர்களும் என்று குற்றம் சுமத்துகிறார்.

இந்து எதிர்ப்பு என்று சொல்வது சங்கிகளுக்கான சிக்னல்.

இந்திய எதிர்ப்பு என்பது அரசுக்கான சிக்னல்.

இவரது இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரத்தை சொல்ல முடியுமா?

மோடி ஆட்சியை எதிர்த்தால் தேச விரோதி என்று இழிவு படுத்தும் சங்கியின் மொழியிலேயே இவரும் பேசுகிறார்.

இந்துத்துவ வெறியை எதிர்த்தால் அதை இந்து மதத்தின் மீதான வெறுப்பாக திசை திருப்புகிறார்.

அவற்றை செய்பவர்கள் அதி தீவிர பெந்தேகோஸ்தே கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் என்று விஷத்தை கக்குகிறார்.

தன்னை எச்சப் பொறுக்கி என்று திட்டிய ஆள் மீது மட்டும் கோபம் வரவில்லை. அந்த திட்டை ஏற்றுக் கொள்கிறார் போல.

ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் முகம் என்று நூல் வருகிறது என்றால் பதட்டமடையும் ஆஜானின் இந்த வாசகங்களை வேறெப்படி அழைப்பது?

மத மோதலை உருவாக்குகிறார் என்று ஜெயமோகனை சிறையில் போடுவதுதான் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்.

பிகு: இது முதல் ட்ம்ப்ளர் பாயசம்.

அடுத்த ட்ம்ப்ளர் – ஆஜான் எனும் பொய்யன் (எழுத்தாளர் தோழர் தமிழ்நதி குறித்த ஆஜானின் பொய்கள் ஆதாரத்துடன் அம்பலம்)

No comments:

Post a Comment