Thursday, March 18, 2021

இன்று அலுவலகம் இயங்காது

 


15,16 மார்ச் 2021 ஆகிய நாட்களில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நடத்திய வேலை நிறுத்தம்.

நேற்று பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

இன்று எல்.ஐ.சி நிறுவனத்தில் அனைத்து அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள் அமைப்புக்கள் பங்கேற்கும் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம்.

இந்தியாவில் இருக்கிற அனைத்து தொழிற்சங்க அமைப்புக்கள் ஆதரவு அளித்திருக்கிற போராட்டங்கள் இவை.

இத்தேசத்து மக்களின் உழைப்பால் உருவான செல்வங்களான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க விழையும் தரகு அரசுக்கு எச்சரிக்கை அளிக்கவே இப்போராட்டங்கள்.

இந்தியா எல்.ஐ.சி பங்கு விற்பனையை நிராகரிக்கிறது என்ற செய்தியை இன்று எடுத்துச் செல்கிறோம்.

நாளை இந்தியா இந்த ஆட்சியாளர்களையே நிராகரிக்கும்.



இப்பிரச்சினை தொடர்பாக முழு விபரங்களை அறிந்து கொள்ள மூத்த ஊடகவியாளர் திரு ஜென்ராமிற்கு எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அளித்துள்ள பேட்டியை பாருங்கள்.

யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

உங்கள் ஆதரவை #IndiaRejectsLICIPO

என்ற ஹேஷ்டேகோடு ட்விட்டரில் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்

No comments:

Post a Comment