Thursday, July 25, 2019

அந்த குரலில் அப்படியே மயங்கி . . .


நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஒரு வேலையாக வெளியே போயிருந்தேன். திரும்பி வருகையில் திமுக பிரச்சார வாகனம்(ஆமாம். வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் ஐந்து அன்று நடைபெறவுள்ளது) ஒன்று காலியாக  முன்னே போய்க் கொண்டிருந்தது. 

அந்த வாகனத்தில் ஒரு பிரச்சாரப் பாடல்.  மறைந்த நாகூர் ஹனீபாவின் குரலில் அப்படியே மயங்கி விட்டேன். மெதுவாகச் சென்ற  அந்த வாகனத்தை ஓவர் டேக் செய்து போயிருக்கலாம். ஆனால் அந்த கம்பீரக்குரல் அப்படிச் செய்ய அனுமதிக்கவில்லை. 

எங்கள் அலுவலகம் வரும் வரை அந்த குரலைக் கேட்டபடி வந்து கொண்டே இருந்தேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற  அடிப்படையில்  திரு நாகூர் ஹனீபாவின் குரலில் ஒலித்த இரண்டு  திரைப்பாடல்களின் காணொளி இணைப்புக்கள் கீழே

நட்ட நடு கடல் மீது

உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்?

நாகூர் ஹனிபா என்றாலே மனதில் நினைவு வரக்கூடிய இரண்டு பாடல்களை பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி சரியாக இருக்கும்?

எல்லோரும் கொண்டாடுவோம் . . .

இந்த பாடல் அவருடைய குரலுக்காக மட்டுமே

இறைவனிடம் கையேந்துங்கள்


3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. மதங்களைத் தாண்டி மயக்கும் குரல்.. எப்பொழுதும்!

    ReplyDelete