Sunday, July 7, 2019

நண்டு உடைத்த அணை . . .



மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி என்ற இடத்தில் ஒரு அணை உடைந்து ஒன்பது பேர் இறந்து விட்டனர். பதினைந்து பேர் காணாமல் போய் விட்டனர்.

அணை உடைந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?

அங்கே நண்டுகள் அதிகமாக அன்று வந்து அணையை துளைத்து விட்டதாம். 

இப்படிச் சொன்னவர் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சவந்த்.

அணையில் ஏற்பட்ட விரிசல்கள் பற்றி மக்கள் எத்தனையோ முறை சொன்ன பின்பும் அலட்சியமாக இருந்து விட்டு இப்போது நண்டுகள் மீது பழி போடுகிற இவர் எந்த கட்சியாக இருப்பார்?

இல்லையில்லை

செல்லூர் ராஜூவின் அண்ணன் போல கருத்து தெரிவித்தாலும் அதிமுக கிடையாது.

ரேடார் புகழ் மோடியின் பாரதீய ஜனதா கட்சிதான். . .


No comments:

Post a Comment