Friday, July 26, 2019

வீதியில் நிற்கும் வீர் சக்ரா விருதாளர்.


எங்கள் மேற்கு மண்டலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் வி.எஸ்.நால்வாடே அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த பதிவு இது.



கார்கில் போர் வெற்றி தினத்தை கொண்டாடும் இந்நாளில் டைகர் சிகரத்தை மீட்பதற்கான போரில் பாகிஸ்தான் கேப்டன் ஷேர் கானை வீழ்த்தி வீர சாகஸம் புரிந்த வீரர், வீர் சக்ரா விருது பெற்ற  அன்றைய சிப்பாய் சத்பால்சிங் பஞ்சாபில் போக்குவரத்து ஹெட் கான்ஸ்டபிளாக பவானிகர் என்ற சிறிய ஊரின் வீதியில் நிற்கிறார். அவரால் கொல்லப்பட்ட கேப்டன் ஷேர்கானுக்கு பாகிஸ்தான் அரசு தன்னுடைய வீர விருதுகளிலேயே மிக உயர்ந்த விருதான நிஷான் –இ-ஹைதர் விருதை வாழ்நாளுக்கு பிந்தைய விருதாக வழங்கி கௌரவித்தது. ஆனால் சத்பால்சிங்கை நாம் வீதியில் நிறுத்தியுள்ளோம்.

பிகு: இச்செய்தி வைரலான பின்பு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் சத்பால்சிங்கிற்கு உடனடியாக உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்துள்ளார்.

விமர்சனத்தை ஏற்று செயல்பட்ட பஞ்சாப் முதல்வருக்கு பாராட்டுக்கள்.

1 comment:

  1. At least they have to give proper food to our army people. Who wants award and reward.

    ReplyDelete