Sunday, July 7, 2019

யானைகள் காதல் செய்தால் . . .

எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின் கட்டுரை




*புற நானூறு பாடலும்...*
*சாமானிய மக்களின் பாடும்...*
*********************************
க.சுவாமிநாதன்

*புற நானுற்று பாடலை இந்திய நாடாளுமன்றம் கேட்டதில் மகிழ்ச்சி.*

*அப் பாடலின் கருத்தும் முக்கியம். கதிரை அறுத்து யானைக்கு கொடுத்தால் அதன் பல நாள் பசி தீரும். அதுவே வயலுக்குள் இறங்கினால் பயிர் முழுக்க அழிந்து விடும். இதுவே கருத்து.*

பொருத்தமான மேற்கோள். உலகமய காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு உவமானம் யானைதான். கார்ப்பரேட்டுகளின் லாப போட்டியில் சாதாரண மக்களின் நலன்கள், உரிமைகள் பாதிக்கப்படுகிமன்றனவே.. என்ற கேள்வி எழுந்த போது

*யானைகள் காதல் செய்யும் போது புல்வெளிகள் நசுங்கத்தான் செய்யும்* (When elephants make love, grass is bound to suffer)

*என்றுதான் கூறப்பட்டது.*

*ஆகவே நிர்மலா சீதாராமன் அவர்களும் யானை பசி பற்றியே கவலைப்பட்டுள்ளார். யானைக்கு எப்படி செல்வ பங்கீட்டில் பங்கு கொடுப்பது என்பது பற்றிய முதலாளித்துவ சமூகத்தின் நுட்பமான அரசியலை விளக்கியுள்ளார்.*

*இந்த சமூகத்தின் உள்ளார்ந்த ஆதிக்க குணத்தை மறைக்கிற அழகான முகமூடியே அரசியல். மக்கள் தாக்கப்படுவதற்கான இசைவை மக்களிடமே பெற்றுத் தருகிற "சமூக ஒப்புதல்" (Social Consent) உத்தி அது.*

*இனி பட்ஜெட்டிற்கு வருவோம்.* 

*2009 தேர்தலின் போதே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருமானவரி விலக்கு வரம்பை ரூ 5 லட்சம் ஆக்குவோம் என்று பா.ஜ.க மேடைகளில் பேசப்பட்டது. 2014 ல் இருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரி முன்மொழிவுகள் வாசிக்கப்படும் போது நடுத்தர வர்க்கத்தினர் இதயங்கள் படபடக்க கேட்பார்கள். ஆனால் நடக்கவில்லை. இந்த முறையும் அழகு தமிழில் புறநானூறு பேசிய புதிய நிதியமைச்சர் 5 லட்ச வாக்குறுதியை மட்டும் மறந்து விட்டார்.*  

*ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உச்ச வரம்பு உயர்ந்து விட்டது. ரூ 250 கோடிகள் வரை மட்டுமே 25 சதவீத கார்ப்பரேட் வரி என்பது ரூ 400 கோடி வரை என்று மாற்றப்பட்டு விட்டது. அதாவது இவர்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து ஒரே அடியில் 5 சதவீத சலுகை. மொத்த நிறுவனங்களில் 99.3 சதவீதத்திற்கு இந்த சலுகை விரிவாக்கப்பட்டு விட்டது என்றால் பாருங்கள்.*

*ஆனால் சூப்பர் ரிச் மீது சர்சார்ஜ் அதிகரிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு "ராபின் ஹுட் டேக்ஸ்" என்பது வணிக இதழ்கள் சூட்டியுள்ள பெயர். குடம் குடமாக சில வணிக இதழ்கள் கண்ணீர் விட்டுள்ளன. உண்மையில் 74983 பேர்தான் ஒரு கோடி முதல் 5 கோடி வரை வருமானம் காட்டுகிறார்கள். 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளதாக 6361 பேர் மட்டுமே கணக்கு காண்பிக்கிறார்கள். இது சந்தேகத்திற்குரிய என்ணிக்கை. 1 கோடிக்கும் 5 கோடிக்கும் இடைப்பட்ட வருமானம் பெறுகிற 74983 பேரிலும் பெரும்பான்மையோர் 1 கோடிக்கும் இரண்டு கோடிக்கும் இடைப்பட்டவர்களே. அவர்களுக்கு இந்த சர் சார்ஜ் உயர்வு கிடையாது.* 

*இதனால் ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் வரி விகிதம் 37 சதவீதத்தை தொட்டு விட்டது, இது உலகில் மிக அதிகம், இது தொழிலதிபர்களின் முனைப்பை பாதிக்கும் என்று பக்கம் பக்கமாக வணிக இதழ்களில் எழுதுகிறார்கள். ஆனால் உண்மை என்ன ஜெர்மனியில் 2 கோடி வருமானம் உள்ளவர்களுக்கே 45 சதவீத வரி. ஜப்பானில் 2.5 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரி. பிரிட்டனில், சீனாவில் உச்ச பட்ச வரி 45 சதவீதம். ஆகவே தொழிலதிபர்கள் காண்பிப்பது செல்ல கோபம். தேர்தல் பத்திரங்களில் 95 சதவீதத்தை ஆளும்கட்சிக்கு கொடுத்தவர்களுக்கு கோபம் வராதா! வருகிறது. அவர்களுக்கே புற நானூறு கதையை சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர். யானைகளே கொஞ்சம் காத்திருங்கள்... விளைச்சல் முழுவதும் உங்களுக்குதான் என்று.*

*ஆனாலும் மூலதனம் பரபரக்கிறது. அடம் பிடிக்கிற "அசுரக்" குழந்தையல்லவா அது. (புராண அசுரர்கள் நல்லவர்கள்). "கூட்டுக் களவு முதலாளித்துவம்" (Crony Capitalism) என்கிற வகையில் என் பசிக்கு சோளப் பொரியா என்கிறது. சாமானிய மக்களின் வாழ்க்கை எனும் பயிர் அழிகிறது.*

No comments:

Post a Comment