Saturday, July 20, 2019

ஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்





உங்களுக்கு தெரிந்ததுதான்
ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஏகலைவன் யார் தெரியுமல்லவா?

மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். 

ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். 

ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர்.

ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான். 

ஒருநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான். 

அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, "இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும்?" என்று வியப்புடன் கேட்கிறான்.

துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். "எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்?"என்று கேட்கிறார்.

"உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்" என்கிறான்.

அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர்? எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார். 

"ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்" என்றார். 
*என்ன கேட்டாலும் தருகிறேன்" என்றான் ஏகலைவன்.

"உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு",என்கிறார் துரோணர்.

மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன். 

ஆறு மாதம் கழித்து...

 துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன...

செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார். 

அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது.
இரு புலிகளும் செத்து விழுந்தன.

கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார்.

கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான்.
திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து
"இது எப்படி சாத்தியம்...?
கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய்?" என வினவினார்.

"தங்களுக்கு குருதட்சணையாக எனது வலது கட்டை விரலைக் கேட்டீர்கள்.
நானும் வெட்டிக் கொடுத்தேன் குருவே..."

"நான் பயிற்சி எடுத்தது இடது கையினால் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லை துரோணரே", என்றான்.

துரோணர் மிரண்டார்

இடதுசாரி ஏகலைவனைக் கண்டு...

5 comments:

  1. தலைப்பில் எழுத்து தவறு உண்டு

    ReplyDelete
  2. semma twist... super...

    ReplyDelete
  3. இது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. மகாபாரதமே ஒரு புனைவு. அதில் இதுவும் ஒரு புனைவு

      Delete