Tuesday, July 2, 2019

இதெல்லாம் சரியில்லை பசங்களா!


நேற்று செய்யார் சென்றிருந்தேன். செய்யாரை நெருங்குகையில் முன்னே சென்ற மினி பஸ்ஸை பார்த்து பதறி விட்டேன்.

பின்னே உள்ள படிக்கட்டுக்களில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்களைப் பார்த்து வந்த பதற்றம் அது.

பஸ்ஸை கடக்கையில் பார்த்தால் அத்தனை பேரும் உள்ளே நிற்பதற்கான இடம் இருந்தது.

ஆக ஒரு சாகஸ அனுபவமாகத்தான் அவர்கள் அப்படி பயணிக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

வேண்டாம்பா பசங்களா!

சில நிமிட சாகச அனுபவத்திற்காக உயிரை பணயம் வைக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தின் நிம்மதியை குலைக்க வேண்டாம்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. You should have stopped the bus and advised the driver to get these kids inside the bus or not to move untill they get off from travelling like this. cannot imagine if anything unfortunate happened

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஓட்டுனரிடம் சொல்லத்தான் செய்தேன். இவங்க தொல்லையால மெதுவாக ஓட்டிச் செல்வதாக அவர் கூறி விட்டார்.

      Delete