Thursday, July 18, 2019

இங்க கூடவா போன்? கருமம்டா



நேற்று மதியம் என்னை எரிச்சலூட்டிய நிகழ்வு.

மதியம் ரெஸ்ட் ரூம் சென்ற போது ஒரு வாலிபர், அலுவலகத்திற்கு ஏதோ சேவைக்காக வந்தவர்  யூரினலில் நின்று கொண்டு அலைபேசியில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலின் செய்தி என்பது காதில் வந்து விழுந்ததிலிருந்து தெரிந்தது.

என்னதான் தலை போகிற செய்தியாக இருந்தாலும் அதற்கு நேரம், இடம் எல்லாம் கிடையாதா? ஒரு இரண்டு நிமிடம் கூட பொறுமையாக இருக்க முடியாதா?

சூடாக திட்டலாம் என்றால் அதற்கு முன்பாக அவர் கிளம்பிப் போய் விட்டார்.

ஒரு தகவல் தொடர்பு சாதனமான அலைபேசி ஸ்மார்ட்டாக மாறியதிலிருந்து மக்களின் வாழ்க்கை முறை மோசமாகிக் கொண்டே போகிறது.

காவல்துறை அதிகாரி திரு சைலேந்திர பாபு தினத்தந்தியில் எழுதிய கட்டுரையை தீக்கதிர் இதழில் நேற்று மறு பிரசுரம் செய்திருந்தார்கள். அதை  காலையில் படிக்கும் போதே மிகவும் கவலையாக இருந்தது.

இந்த சம்பவம் கவலையை அதிகரித்து விட்டது. 


1 comment:

  1. இவங்க தான் ஷாரிங் ( sharing) போராளீஸ்

    ReplyDelete