Monday, September 24, 2018

மச்சம் ஒட்டிய மாறுவேட ராசா . . .



இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு ஹெச்.ராசாவை தேடி வரும் நிலையில் அவர் எப்படி திருக்கடயூர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்போடு வந்து போனார் என்று நம்முடைய ஸ்காட்லாண்ட்யார்ட் போலீசிற்கு நிகரான தமிழக போலீஸை பலர் கேள்வி கேட்கிறார்கள்.

"நான் தருகிறேன் லஞ்சம்" என்று அவர் சொன்னபடி லஞ்சம் கொடுத்து விட்டாரா? அதை வாங்கிக் கொண்டுதான் போலீஸ் மவுனமாக உள்ளதா என்றும் இதயமில்லாமல் கேட்கிறார்கள்.

ஹெச்.ராசா கைது செய்யப்படாமல் இருப்பதைப் பற்றி உயர்நீதி மன்றமும் கவலைப்படவில்லையே, அப்படியானால் அது உண்மையிலேயே ராசா சொன்னது போல கூந்தல் மன்றம்தானா என்றும் சிலர் இரக்கமில்லாமல் கேட்கிறார்கள்.

பாவம் அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை தெரியவில்லை.



ஹெச்.ராசா, கன்னத்தில் மச்சம் ஒட்டிக் கொண்டு மாறு வேடத்தில் வந்தால் போலீசால் அவரை எப்படி கண்டுபிடிக்க முடியும்?


No comments:

Post a Comment