Wednesday, March 29, 2017

ஜனாதிபதியா? யாரந்த பித்தன்?




பிரபஞ்சங்களின் தலைவன் நான்.
துண்டு நிலமா என் ஆளுகையில்?

கண்ஜாடையில் உத்தரவிடுபவன் 
கையில் பேனா தருவீர்களா?

காலடியில் மண்டியிடுபவர்களை
கை குலுக்கி வரவேற்பதா?

பதவிகளை பிச்சையாய் தருபவன்
பதவியேற்பு வேறு நடத்தித் தருவதா?

பிடிக்காத  கொடியை
ஏற்றி வைத்து வணக்கம் சொல்வதா?

மதச்சார்பற்ற நாடெனச் சொல்லும்
அரசியல் சாசனத்தின்
பாதுகாவலனாய் இருப்பதா?

அரை டவுசர் போடும் எனக்கு
புஷ் கோட் பொருந்திடுமா?

நடிப்புதான் என்றாலும்
நாகரீகமாய் எப்படி நான்?

தலைவர்களின் தலைவன்,
பிரதமர்களின் பிரதமர்.
என்னை ஜனாதியாகச்
சொன்ன பித்தன் எவன்?

(ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தை ஜனாதிபதியாக்க
வேண்டும் என்ற ஆலோசனைக்கு அவரின் மைன்ட் வாய்ஸ் 
எப்படி இருந்திருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை) 

 

 



 

No comments:

Post a Comment