Tuesday, March 21, 2017

காட்டுக்கும் கவிதைக்கும் பொய் அழகு





காலையில் வந்தது
இரண்டு வாழ்த்துச் செய்திகள்.

உலக காடுகள் தினமென்று
ஒரு வாழ்த்து சொன்னது.

கவிதைகள் தினமும் இன்றுதானென்று
இன்னொரு வாழ்த்து நினைவுபடுத்தியது.

காடுகள் வாழ்கவென
கவிதையும் படிக்கலாம்.

காட்டுக்குள் குடியேறி
கவிதையாகவும் வாழலாம்.
                                                 
காட்டை அழித்து
வானாளவிய சிலையும் வைத்து
காடுகள் வளர்ப்போம்
என  உபதேசமும் செய்யலாம்.

கவிதைக்கும் பொய் அழகு.
காடு பற்றிய கரிசனத்துக்கும்
பொய்தான் அழகு.

.

1 comment: