Thursday, February 9, 2017

அந்த பொறுக்கிகளுக்கு இந்த தண்டனை தகும் . . . .



அரியலூர் நந்தினிக்கு நிகழ்ந்த கொடூரத்தின் வலி இன்னும் மறையவில்லை. அடுத்த இடியாய் மாங்காடு ஹாசினிக்கு நேர்ந்த அராஜகம் அமைந்துள்ளது.

பாலியல் வன் கொடுமைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போடும் நிர்மலா பெரியசாமி போன்ற பொறுப்பற்ற பேர்வழிகள் இந்த பச்சைக் குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு யாரை குறை சொல்வார்கள்?

பெண்களின் ஆடைதான் பாலியல் வெறியை தூண்டுகிறது என்று வாய் கூசாமல் புளுகுகிற பெரிய மனிதர்களே, ஹாசினியின் உடையைத்தான் இப்போதும் உங்கள் வாதத்திற்கு துணைக்கு அழைப்பீர்களோ?

பெண்களின் வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு உபதேசம் செய்யும் பெரியவர்களே, பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள் என்று மகனைப் பெற்றவர்களிடம் சொல்ல உங்கள் உதடுகள் ஏன் திறப்பதில்லை?

சட்டம் செய்யும் கொலையாக மரண தண்டனயை பார்க்கிறவன் நான். ஆனால் மணிகண்டன், ஜஸ்வந்த் போன்ற  அயோக்கியர்களுக்கு அத்தண்டனையைத் தவிர வேறு எது பொருத்தமாக இருக்கும்?

கீழே உள்ள படம் ஒரு தோழர் வாட்ஸப்பில் அனுப்பி வைத்தார். பாலியல் வன் கொடுமைக் குற்றங்களுக்கு இப்படிப்பட்ட தண்டனைகள்  அளித்தால் கூட தவறில்லை என்றே தோன்றுகிறது.



வெறியேறிப் போனவர்களுக்கு இரக்கம் தேவையில்லை.

இக்கொடுமைகள்  கொஞ்சமாவது குறைய  அவசியம் வேண்டும்  மது விலக்கு.

1 comment:

  1. //பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள் என்று மகனைப் பெற்றவர்களிடம் சொல்ல உங்கள் உதடுகள் ஏன் திறப்பதில்லை?//
    மிகவும் அவசியம்

    ReplyDelete