Friday, February 24, 2017

அழிவு (ஆதி) யோகி பற்றி அற்புதமாய் ஒரு . . .

இன்று காலை தீக்கதிரில் படித்த ஒரு அற்புதமான கவிதையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். போலிச்சாமியாரின் பக்தர்களுக்கும் காவிக்கூட்ட (சங் பரிவார) கள்வர்களுக்கும் நிச்சயம் எரிச்சல் வரும். உண்மையைச் சொன்னால் கோபம் வருவது இயல்புதானே. வழக்கமான வசவாளர்கள் வழக்கம் போல விஷம் கக்கி விட்டு தங்களை அசிங்கப்படுத்திக் கொண்டு செல்லுமாறு அன்புடன் அழைக்கிறேன். 
 
அதியோகி அழைக்கிறார்


 
அதியோகி அழைக்கிறார்
மனையாளைப் புதைத்த
நிலத்தருகே
உமையாளின் கணவருக்கு
சிலை எழுப்பி
அதியோகி அழைக்கிறார்

மலை குடைந்த
குகை மாளிகையில்
களி நடம் புரியும் கவியோகி
வெட்ட வெளியில்
மலை அளவு சிலை வைத்து
அதியோகி அழைக்கிறார்

சுற்றி இருக்கும்
வனம் நிலம்
அத்தனைக்கும் ஆசைப்பட்ட
அற்புத
அதியோகி அழைக்கிறார்

திருநீற்றுப்பட்டை அடித்து
தயாராவதற்கு முன்பே
திருட்டுப்பட்டா தயாரித்த
அதியோகி அழைக்கிறார்

கடும் கருங்கல்லில்
பெரும் சுவர் எழுப்பி
கஜ முகங்களின் வழித்தடுத்து
மீறி நீளும் துதிக்கைகளுக்கு
மின்சார வேலி போட்டு
சிவமோட்சம் கொடுத்த
சித்தர்
அதியோகி அழைக்கிறார்

தன்மகளுக்கு
தாம்பத்யம் தந்தருளி
பிறர் மகளுக்கு பிரம்மச்சரியம்
பூனும் போது சிரைத்த ரோமங்களை
தன் தாடியில் சூடிய தவ
அதியோகி அழைக்கிறார்

நிலம் பிரித்து வனம் அழித்து
செதுக்கி வைத்த சிலை
தென்னாடு உடைத்து
என் நாட்டவர்க்கும் இறைவனாய்
இருப்பவனுக்கு
ஐகோர்ட்டில் ஆர்டர் வாங்கி
பிரதிஷ்டை செய்ய
அதியோகி அழைக்கிறார்

122 அடியைத் திறக்க
56 அங்குலம் வருகிறார்
கோடி கோடியாய் கொட்டி
சுத்தம் செய்வேன் கங்கையை என்றவர்
திறக்கும் சிவனின்
தலையில் கங்கை
இல்லை இல்லவே இல்லை

- ந.முத்து

நன்றி - தீக்கதிர் 24.02.2017

2 comments:

  1. //மனையாளைப் புதைத்த//

    இந்தக் கதை உங்களுக்கும் தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. அந்த நாற்றத்தை மறைக்க முடியாதே?

      Delete