Monday, February 6, 2017

லண்டன் டாக்டர் வராமல் இருந்திருக்கலாம்




சில சமயங்களில் அதி புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்துக் கொண்டு செய்கிற செயல்கள் எல்லாம் கடைசியில் எதிராகப் போய் விடும். மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத வடிவேலு போல ஆகி விடும்.

ஜெ இறந்து எவ்வளவோ நாள் ஆகி விட்டது. அவர் அப்பல்லோவில் இருந்த காலம் முதல் இன்று வரை எல்லாம் மர்மம்தான்.

சசிகலா நேற்று அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக தயாராகிக் கொண்டிருக்கிறார். இன்று லண்டர் டாக்டர் பேட்டி கொடுத்து ஜெ மரணம் இயற்கையானது என்று சான்றிதழ் தருகிறார்.

ஜெ வின் மரணம் மர்மமானது என்று சந்தேகத்தில் இருந்தவர்களைக் கூட அதில் வில்லங்கம் இருக்கிறது என்று நம்ப வைத்த பெருமை இன்றைய லண்டன் டாக்டரின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கே உண்டு.

தன் மீதான அதிருப்தியை இன்னும் அதிகப்படுத்தி விட்டார் சசிகலா. 

No comments:

Post a Comment