Friday, February 3, 2017

ஆதரவாய் மீண்டும் நீண்ட கரம்





அரியலூர் நந்தினி - தமிழகம் சமீபத்தில் மீண்டும் தலை குனிந்தது இந்த பதினாறு வயது பெண்ணிற்கு நடந்த கொடூரத்தால். திருமணம் செய்து கொள்வதாக ஆசை காண்பித்து ஏமாற்றி ஒரு கருவையும் அளித்து, பின் அப்பெண்ணை தனியாக வரவழைத்து நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி சீரழித்து கொலை செய்தான் ஒரு அயோக்கியன். மத்தியில் ஆளும் காவிக்கூட்டத்தின் ஒரு அங்கமான இந்து முன்னணியைச் சேர்ந்தவன் என்பதால் அவனை அழைத்து விசாரிக்கக் கூட தயங்கியது ஏவல் துறை. கிணற்றில் பல நாட்கள் முழுகி அழுகிய நிலையில்தான் சடலத்தை கண்டறிந்தார்கள்.  அதன் பின்புதான் அந்த குற்றவாளியை கைது செய்தார்கள். இந்த அராஜகத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளரை இன்னும் நெருங்க காவல்துறை தயாராக இல்லை.

இப்பிரச்சினையில் தொடக்கம் முதலாக போராடி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இடதுசாரி அமைப்புக்கள்தான். 

கொல்லப்பட்டது தலித் பெண் என்பதாலோ, அல்லது கொலையாளிகள் இந்து முன்னணி என்பதாலோ மற்ற அரசியல் கட்சிகள் இப்பிரச்சினைக்கும்  தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஒதுங்கிப் போய் விட்டார்கள்.

இச்சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் அரியலூர் சென்று நந்தினியின் குடும்பத்தை சந்தித்துள்ளனர். அவர்க்ளோடு எங்களது தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளர்களும் சென்றுள்ளனர்.

அக்குடும்பத்திற்கு எங்களது  தஞ்சைக் கோட்டச் சங்கம் ரூபாய்  25,000 நிதி உதவி அளித்துள்ளனர்.

பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாய் என்றென்றும் நீளும் முதல் கரமாய் இருப்பது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியம் என்பதை நிரூபித்த தஞ்சை கோட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
 

2 comments:

  1. we have to take action ourselves.no body from GOVT will consider normal people...

    ReplyDelete
  2. தஞ்சைக் கோட்டத்திற்கு எனது வாழ்த்துக்களும்

    ReplyDelete